Skip to main content

ஊக்க மருந்து பயன்படுத்தினேனா!!?? -காமன் வெல்த்தில் தங்க பதக்கம் வென்ற சஞ்சனா சானு

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

அண்மையில் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு காமன் வெல்த் போட்டியில்  வென்ற இரண்டாவது தங்கப்பதக்கம் இது. இந்த நிலையில் சஞ்சிதா சானுவிற்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில்  அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தினார் என்றும்   இதனால் அவர் இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் சர்வதேச பளுதூக்கும் சம்மேளனம்  நேற்று முன்தினம் அறிவித்தது.


 

SPORTS

 

 

 

இப்படி ஊக்க  மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு நேற்று அளித்த பேட்டியில் '' நான் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகள் எதையும் பயன்படுத்தவில்லை. என்னை இடை நீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்கும் சம்மேளனத்தின் ஆதரவுடன் அப்பீல் செய்வேன் என்று தெரிவித்தார்.

 

 

 

இந்த சர்ச்சை குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளன பொதுச்செயலாளர் சக்தேவ் யாதவ் கருத்து தெரிவிக்கையில் '' ஊக்க மருந்து சோதனை முடிவுகளை அறிவிக்க ஏன்? நீண்ட காலம் பிடிக்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. மருத்துவ சோதனைக்கு பிறகு சானு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டார், அதற்கு பின்னர் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியிலும் கலந்துகொண்டு தங்கம் வென்றார். ஏன் இதுபோல் நடக்கிறது என்பதை எதிர்த்து போராடுவோம் என்று கூறினார்.

 

அதுபோல் சானு மீதான ஊக்க மருந்து சோதனையில் ஊக்க மருந்து பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டால் நான்காண்டு வரை தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக தெரியப்படுகிறது.

 

2008-ஆம் ஆண்டு முதல் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தால் நடந்தபட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய 13-வது இந்தியர் சஞ்சிதா சானு என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.