Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

pv sindhu

 

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

அதன்தொடர்ச்சியாக பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தநிலையில், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் அகனே யமாகுச்சியை எதிர்கொண்டார்.

 

இந்தப் போட்டியில் முதல் செட்டை சிந்து 21 - 13 என எளிதாக வெல்ல, இரண்டாவது செட்டை வெல்ல யமாகுச்சி கடும் சவாலாக இருந்தார். இருப்பினும் இறுதியில் 22 - 20 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் சிந்து வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சிந்து, இந்த ஒலிம்பிக்கில் தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் நேர் செட்களில் வென்று அசத்திவருவது குறிப்பிடத்தக்கது.