Skip to main content

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழர்

Published on 07/04/2018 | Edited on 07/04/2018

ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டியில் 77கிலோ எடைதூக்கும் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த   பளு தூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்றுள்ளார். பளுதூக்குவதில் 144 கிலோ மற்றும் 173 கிலோ எடை பிரிவு என மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

commonwealth

 

இவர் ஏற்கனவே 2014-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். இதுவரை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இவர் மொத்தம் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண நடுத்தர குடுப்பதில் பிறந்த சதீஷ்குமார் தனது தந்தையின் ஊக்குவிப்பால் தனது 12-வது வயதிலிருந்து பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு மாவட்ட அளவிலும் பின்பு மாநில அளவிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றவர்.

 

commonwealth



தற்போது காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் குமாரை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.