Skip to main content

ஆயுளை வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும்? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்

Published on 30/06/2023 | Edited on 11/07/2023

 

 Dr Suganthan - Hair Problem

 

விடியற் காலையில் நாம் எழும்போது நல்ல ஆக்ஸிஜன் நமக்குக் கிடைக்கும். நமக்குத் தேவையான எனர்ஜி அனைத்தும் காலை 3 மணி முதல் 6 மணிக்குள் கிடைத்து விடுகிறது. அதன் பிறகு மலம் கழிப்பது அவசியம். வாரத்தில் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். அதுவும் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் இருக்கும் உஷ்ணம் வெளியேறும். ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இவ்வாறு குளிக்கலாம். காலை நேரத்தில் தான் குளிக்க வேண்டும்.

 

பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குளிக்கலாம். இதன் மூலம் உடல் எப்போதும் குளிர்ச்சியாக, ஏசி அறையில் இருப்பது போன்று இருக்கும். இன்று பலருக்கு முடி உதிர்தல் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் அந்தப் பிரச்சனையிலிருந்து நாம் விடுபட முடியும். உடலின் உஷ்ணம் குறையும்போது முடி உதிர்தலும் குறையும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதத்தில் எரிச்சல் இருக்கும். எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் அதுவும் சரியாகும். 

 

இதன் மூலம் சர்க்கரையின் அளவும் குறையும். கேரள மக்கள் தங்களுடைய உணவிலும் குளியலிலும் தினசரி எண்ணெய் சேர்த்துக் கொள்வதால் அவர்களுக்கு கேன்சர் நோய் ஏற்படுவது குறைவாக இருக்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சுடு தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். மதிய நேரத்தில் உறங்கக் கூடாது. அந்த நாளில் உணவில் நீர் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளக் கூடாது. வெற்றிலை பாக்கு போடுவதன் மூலம் உணவு எளிதில் ஜீரணமாகும்.
வெற்றிலை சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. இதன் மூலம் உடலுக்குள் இருக்கும் சளியும் எளிதில் வெளியேறும். செல்போனின் தாக்கத்தால் நம்முடைய கண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. கண்களில் எண்ணெய் தடவுவதன் மூலம் கண் பிரச்சனைகள் தீரும். மொபைல் போன் பார்ப்பதால் இன்று சிறு பிள்ளைகள் கூட கண்ணாடி போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கண்களில் நல்லெண்ணையை நாம் தடவுவதன் மூலம் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கிறது. இதன் மூலம் கண் பார்வை இன்னமும் சிறப்பாக இருக்கும். முடிந்தவரை சுட வைத்த நீரையே நாம் பருக வேண்டும். இதன் மூலம் உணவு எளிதில் செரிமானமாகும்.

 

 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.

Next Story

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Dr Suganthan | Cold | Dry Cough |

 

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

 

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

 

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும். 

 

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமான உடல்நிலைக்கு வரலாம்.

 

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும். 

 

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.