Skip to main content

39 நாடுகளுக்கு விசாவை ரத்து செய்து இலங்கை அரசு அதிரடி!

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (ஈஸ்டர் திருநாள்) அன்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் , உள்நாட்டு மக்கள் உட்பட 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் வைத்து அரங்கேற்றியது தீவிரவாத அமைப்பு. அதே சமயம் சில இடங்களில் தற்கொலைப்படை தாக்குதலும் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . 

 

cancelled



இந்த இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து இலங்கை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். உலக நாடுகள் உதவியுடன் பல்வேறு நாடுகளில் இலங்கையில் தாக்குதல் நடத்தியது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. இலங்கையில் நடந்த தொடர் வெடிக்குண்டு தாக்குதலில் வெளிநாட்டவர் சதி இருக்கலாம் என வெளியானதை அடுத்து 39 நாடுகளுக்கு விசா வழங்குவதை ரத்து செய்தது இலங்கை அரசு. இது குறித்து இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் திரு. ஜான் அமரதுங்கா கூறுகையில் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 

 

srilanka



குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு இலங்கைக்கு வந்து விசா பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறது. இருப்பினும் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு விசாவை தற்காலிகமாக நிறுத்து வைத்துள்ளோம் என்றார். இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டின் சதி இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த விசா வசதியை தவறான முறையில் பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். மேலும் நடப்பாண்டில் மார்ச் மாதம் வரை 7.40 லட்சம் வெளிநாட்டினர் இலங்கைக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 4.5 லட்சம் இந்தியர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர். 

நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது . அதே சமயம் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 139 பேருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தற்கொலைப்படை தீவிரவாதிகளின் தந்தையை கைது செய்தது இலங்கை ராணுவம். மேலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


பி.சந்தோஷ்,சேலம். 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.