Skip to main content

விடுதலையான சில நாட்களிலேயே வேலையை காட்டிய சீரியல் கில்லர்!

Published on 17/12/2019 | Edited on 18/12/2019

தாய்லாந்தை சேர்ந்த பும்பாங் என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்களை கொன்ற காரணத்துக்காக கடந்த 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. அதன் பின்பு அவர் கடந்த 15 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார். 

 

vbn




தாய்லாந்தில் அதிக சிறைக் கைதிகளை அடைத்து வைப்பதற்கான வசதி இல்லாத காரணத்தால் சிறைக்கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதை அந்நாட்டு அரசு வழக்கமாக வைத்திருக்கும். அந்த வகையில் பும்பாங்கையும் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து அரசு விடுதலை செய்யது. ஆனால்,  சிறையில் இருந்து வந்த சில மாதங்களிலேயே அவர் 50 வயதான ஹோட்டல் பணியாளர் ஒருவரை மீண்டும் கொன்றுள்ளார். இதனை உறுதிப்படுத்திய காவல்துறையினனர் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலியை கொன்று சமைத்து சாப்பிட்ட காதலன் கைது!

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வருபவர் ஜோசப். இவரின் காதலியின் பெயர் டாமி. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஜோசப் இதற்கு முன்னதாக சிறைக்கு சென்று திரும்பியதை டாமியிடம் மறைத்துள்ளார். இதைக் கண்டுபிடித்த டாமி அவர் எதற்காக சிறைக்கு சென்றார் என்பதை விசாரித்துள்ளார். முன்னாள் காதலியை கர்ப்பமாக இருக்கும் போது அவரை கொன்ற குற்றத்துக்காக ஜோசப் சிறை சென்றதையை டாமி கண்டுபிடித்துள்ளார். இதனால் ஜோசப்பைத் தன்னைவிட்டு விலகி விடும்படி சொல்லியுள்ளார்.
 

g



இதனால் ஆத்திரம் அடைந்த ஜோசப் டாமியைக் கடத்தியுள்ளார். 3 நாள்களாக டாமி அலுவலகத்துக்கு செல்லாததால் சந்தேகம் அடைந்த அவரது அலுவலக நண்பர்கள் அது பற்றி காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து ஜோசப்பை கைது செய்த காவல்துறையினர் டாமி குறித்து விசாரித்துள்ளனர். காவல்துறையினரின் அதிரடி விசாரணையில் அவர் டாமியைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் அவரது மண்டை ஓட்டை உடைத்து மூளையை பச்சையாக தின்றதாகவும், இதயம் நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளை சமைத்து சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


 

 

Next Story

மதுரையில் அழகிரி ஆதரவாளர் படுகொலை

Published on 12/11/2018 | Edited on 12/11/2018
m

 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும், மு.க. அழகிரி ஆதரவாளருமான  மதுரை வீரன் இன்று அதிகாலையில் அவர் வீட்டருகிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

m

 

கொலைக்கு காரணம் முன் விரோதமா? பெண் தொடர்பா? என்ற கோணத்தில் அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

m

 

கடந்த 2 மாதங்களுக்கு அழகிரி தலைமையில் இவரின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது.  இவ்விழாவில் வாழ்த்திய அழகிரி,  மதுரை வீரன் போன்ற வீரர்கள் என்னுடன் இருக்கும்போது என்னை யாரும் அசைக்க முடியாது என்று கூறினார்.  இந்நிலையில் மதுரை வீரன் மரணம் அழகிரிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.


முகில்