Skip to main content

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

Powerful earthquake in Indonesia!

 

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

இந்தோனேஷியாவிவின் சுமத்ரா தீவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.  சுனாமி தொடர்பான எந்த அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை. கடந்த 2004 ஆண்டு இதே சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Powerful earthquake in Sri Lanka

 

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

இலங்கையின் தெற்குப் பகுதியில் கடலின் நடுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.2 என சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகி உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.