Skip to main content

12 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 1,050 ஆண்டுகள் சிறை!

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

MINOR

 

மலேசிய நாட்டில், தனது 12 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு அந்தநாட்டு நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும், 24 கசையடிகள் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தண்டனை விதிக்கப்பட்ட அந்த நபர், 2018 ஜனவரி முதல் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வரை தனது 12 வயது வளர்ப்பு மகளை, 105 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளான்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வொரு வன்கொடுமை குற்றத்திற்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தீர்ப்பை வாசிக்க மலேசிய நீதிமன்றம் ஐந்து மணி நேரங்களை எடுத்துக்கொண்டது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்