Skip to main content

வினோத காரணம் கூறி 1 லட்சம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய ஐ.பி.எம் நிறுவனம்...

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

கடந்த 100 ஆண்டுகால தொழில்நுட்ப உலகில் மாபெரும் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது ஐ.பி.எம் நிறுவனம். உலகம் முழுவதும் பல நாடுகளில் தொழில் நடத்தி வரும் இந்நிறுவனம் வயது மூப்பின் காரணமாக தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருவதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

 

ibm sacked one lakh employees to look cool and trendy

 

 

ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இணையாக புதுமையாகவும், நாகரீகமாகவும் மாற்றும் பொருட்டு 40 வயதை கடந்த 1 லட்சம் பணியாளர்களை கடந்த 5 ஆண்டுகளில் ஐபிஎம் நிறுவனம் பணியை விட்டு நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐபிஎம் நிறுவனம் இந்த குற்றசாட்டை முற்றிலும் மறுத்த நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்று இது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தரவுகளை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் தனது மொத்த பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை நீக்கியுள்ள இந்நிறுவனம், அதை ஈடுசெய்ய அதிரடி ஆள்சேர்ப்புப் பணியும் செய்துவருவதாக முன்னாள் பணியாளர்கள் ஐபிஎம் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

புதுமையாகவும், நாகரீகமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 40 வயது ஆனவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது பலரையும் ஆச்சர்யமாக பார்க்க வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.