Skip to main content

நகைக்காகவா? கடனுக்காகவா? - 72 வயது மூதாட்டி கொடூரக் கொலை

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

young man went run after passed 72-year-old woman in Villupuram

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள மாரங்கியூர் ஊரைச் சேர்ந்தவர் தாண்டவராயன். இவரது மனைவி 72 வயது மூதாட்டி இந்திராணி. இவருக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இந்திராணியின் கணவர் தாண்டவராயன் சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன்களுக்கு திருமணம் ஆகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மூன்று மகள்களும் வெவ்வேறு ஊர்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு வசித்து வருகிறார்கள். இந்திராணி மட்டும் சொந்த ஊரில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சிவசங்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி இந்திராணியிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அந்தக் கடனை இந்திராணியிடம் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திராணி சிவசங்கரிடம் கொடுத்த பணத்தைத் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

 

இந்நிலையில், நேற்று முன் தினம் 100 நாள் வேலைத்திட்டப் பணிக்கு இந்திராணி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிவசங்கர் இந்திராணியிடம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு இந்திராணி என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் எங்கு தேடியும் கிடைக்காததால் சென்னையில் உள்ள இந்திராணியின் மகன்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து மகன் பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து வந்து ஊரில் பல இடங்களில் தேடியிருக்கிறார். அப்படியும் கிடைக்காததால் பன்னீர்செல்வம் கோரிவினைநல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்திராணியை சிவசங்கர் அழைத்துச் சென்றது தெரியவரவே, போலீசார் சிவசங்கரை தேடியுள்ளனர். ஆனால், சிவசங்கர் தலைமறைவாகி விட்டார். 

 

இதையடுத்து, சிவசங்கரின் வீட்டைத் திறந்து சோதனையிட்ட போலீசார், வீட்டிற்குள் இந்திராணி கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர். தாசில்தார் பாஸ்கர்தாஸ் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் இந்திராணி உடலை சிவசங்கரின் வீட்டில் இருந்து தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் இரும்புக் கம்பியால் அடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான காயங்களும், அவரது இரண்டு காதுகளும் அறுக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளது. இதன் மூலம் சிவசங்கர் கடனைத் திருப்பித் தருவதாக அழைத்துச் சென்று இந்திராணியை கொலை செய்து அவர் அணிந்திருந்த பத்து பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டில் அவரை புதைத்து விட்டுத் தலைமறைவாகி இருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவான சிவசங்கரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் மாரங்கியூர் கிராமத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.