Skip to main content

குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 6,491யில் இருந்து 9,398 ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 6,491 குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு, கடந்த செப்டம்பர் மாதம் 1- ஆம் தேதி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நவம்பர் 12- ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், பணியிடங்கள் எண்ணிக்கை 9,398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

tnpsc group 4 exam vacancy increased


 

இதனிடையே குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு பாடத்திட்டம் குறித்து கருத்துக்களை கேட்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று முதல் டிசம்பர் 1- ஆம் தேதி வரை இணையதளத்தில் தேர்வர்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்