Skip to main content

வட்டிக்காக சகோதரன் குடும்பத்தை தெருவில் நிறுத்தியவர்!!! குடும்பத்தோடு தீ குளிக்க முயற்சி...

Published on 13/05/2019 | Edited on 14/05/2019

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கங்காவரம் மதுரா, நவாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவருக்கு திருப்பதி, பாஸ்கர் என இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர், லாரி ஓட்டுநராக உள்ளார் திருப்பதி. 
 

tiruvannamalai



ஓட்டுநர் திருப்பதி குடும்ப பிரச்சனைக்காக தனது சகோதரர் பாஸ்கரனிடம், தான் குடியிருக்கும் வீட்டு பத்திரத்தை தந்து 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த 2 லட்ச ரூபாய் கடனுக்கு வட்டியாக மட்டும் 2 லட்ச ரூபாய் தந்துள்ளார். அதோடு, அசல் தொகையையும் திருப்பி தந்துள்ளார். பாஸ்கரோ, இந்த வட்டி பத்தாது, இன்னும் கூடுதல் வட்டி வேண்டும் என தகராறு செய்துள்ளார். இந்த பிரச்சனை இருவருக்கும் இடையே இருந்து வந்தது.

வேலை நிமித்தமாக, திருப்பதி வெளியூர் சென்றிருந்த வேலையில், பாஸ்கரன், திருப்பதி வீட்டுக்கு வந்து அவரது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, என் வட்டி பணத்தை தந்துவிட்டு பிறகு இந்த வீட்டுக்குள் வாங்க என மிரட்டி வெளியே துரத்திவிட்டு, கதவை பூட்டு போட்டு பூட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த திருப்பதியின் மனைவி சுமதி மற்றும் பிள்ளைகள் மீனாட்சி, துர்கா, விமல்ராஜ் ஆகியோருடன் தெருவில் இருந்துள்ளனர். விவகாரத்தை திருப்பதிக்கு அவர் மனைவி போன் செய்து கூறியுள்ளார். இதுப்பற்றி கலசப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கூறியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

 

tiruvannamalai



இதனால் மே 13ந்தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு குடும்பத்தோடு வந்த திருப்பதி, தங்கள் மேல் மண்ணெண்ணய் ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றுள்ளார்கள். அப்போது அங்கிருந்த மாவட்ட ஆட்சியரக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்கள்.

தகவல் கேள்விப்பட்டு, திருப்பதி குடும்பத்தினரின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பாஸ்கரன் குடும்பத்தினர் உடனடியாக அரசு வாகனத்தில் நவாப்பாளையம் கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள். கலசப்பாக்கம் வட்டாட்சியர் திருப்பதியின் சகோதரரான பாஸ்கரனிடமிருந்து, பூட்டப்பட்ட வீட்டிற்கான சாவி பெறப்பட்டு திருப்பதி குடும்பத்தினரை பத்திரமாக அவர்களது சொந்த வீட்டில் தங்கவைத்தார்.

திருப்பதி தனது சகோதரர் பாஸ்கரன் மீது அளித்துள்ள புகார் குறித்து, இருதரப்பையும் அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், போலிஸாரும் விசாரிக்க துவங்கியுள்ளனர். வட்டி தொகைக்காக உடன் பிறந்தவனே, தனது சகோதரன் குடும்பத்தை வீட்டை விட்டு விரட்டி, கதவை பூட்டியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் வந்தால் பசியும் பறந்துப்போகும் என்பார்கள். பந்த பாசமும் பறந்து போகும் என்பதை அவர் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். 

Next Story

பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை; 6 பேர் நீதிமன்றத்தில் சரண்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
chennai corporation office near premkumar incident 6 people surrendered in court

சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (40). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட சேட்டு என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். மேலும், யானைக்கவுனி காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இருக்கிறது. சேட்டு கொலை வழக்கில் பிரேம்குமார் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்த நிலையில், சேட்டு கொலை வழக்குக்காக பிரேம்குமார் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு நேற்று (19-12-23) வந்து ஆஜரானார். அதன் பின்னர், அங்கிருந்த தனது உறவினர்களான நரேஷ், வசந்த் ஆகியோருடன் ரிப்பன் மாளிகை எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரேம்குமாரை சுற்றி வளைத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டாக்கத்தியால் ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற நரேஷ் மற்றும் வசந்துக்கும் வெட்டு விழுந்தது. அதில், பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேம்குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த நரேஷ் மற்றும் வசந்த் ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரியமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சேட்டு கொலைக்கு பழிக்கு பழி வாங்க பிரேம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைக் கொலை செய்த குற்றவாளிகள் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட துரை, சஞ்சய் உள்ளிட்ட 6 பேர் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவசங்கர், சாந்தகுமார், நாராயணன், சரவணன், குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 6 பேர் பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.