Skip to main content

சொத்துக்களை பிரித்துக்கொடுத்ததும் தந்தையை பிச்சை எடுக்கவைத்த பிள்ளைகள்;சொத்துக்களை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மனு

Published on 06/05/2019 | Edited on 07/05/2019

 

பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பார்கள்.  அது ஒரு பெரியவரின் வாழ்க்கையில் உண்மையாவிட்டது.  தனது சொத்துக்களை மூன்று பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்ததும் பிள்ளைகள் அவரை அடித்துவிரட்டி பிச்சை எடுக்க வைத்துவிட்டதாகவும், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் ஆட்சியரிடம் மனுகொடுத்துள்ளார் அந்த பெரியவர்.

 

c

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் என்ற கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய பெரியவர் கோவிந்தராஜ்.  அவரது மனைவி மேகலா. இவர்களுக்கு உதயகுமார், மணிகண்டன் ரமேஷ் என மூன்று மகன்கள் உள்ளனர்.

 

கோவிந்தராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான எட்டு ஏக்கர் விவசாய நிலங்களை சமமாக தனது மூன்று மகன்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். சொத்துக்களை பிரித்து கொடுத்த சில நாட்களில்  மூன்று மகன்களும் தந்தை கோவிந்தராஜனை வீட்டை விட்டு அடித்து விரட்டி அடித்துள்ளனர்.

 

c

 

வயிற்றுப்பிழைப்புக்கா பல இடங்களில் பிச்சைகேட்டு காலத்தை கடத்தியவர் இன்று தனக்கு நீதி வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில் ," எனது சொத்தை பிரித்து கொடுத்ததும், சில நாட்களில் என்னை வீட்டைவிட்டு விரட்டிவிட்டனர். பின்பு வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கடந்த மூன்று வருடங்களாக  பிச்சை எடுத்தே உயிர்வாழகிறேன்.

 

வெயிலில் உடம்பு ஒத்துழைக்காமல் போனதும் மகன்களிடம் சென்று தனக்கு உதவுமாறு கேட்டேன். அவர்கள் தன்னை, அடித்து விரட்டிவிட்டனர். உடனே எனது  மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க  நன்னிலம் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதன்பிறகே இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தனது சொத்துக்களை மீட்டு தரக்கோரி மனு கொடுத்துள்ளேன்." என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.