Published on 28/10/2018 | Edited on 28/10/2018
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டாம் இடைத் தேர்தலை சந்தியுங்கள் என தொகுதி மக்கள் கூறியுள்ளதாக அமமுக கட்சி கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன்,
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு வேண்டாம் என தொகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இடைத் தேர்தலை சந்திப்பது நமக்கு வெற்றியை தரும் என்றும் மக்கள் கருத்து கூறியுள்ளனர். ஓபிஎஸ் இபிஎஸ் எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது காலம் கடந்த ஞானம் எனவும் கூறினார்.