Skip to main content

தொலைக்காட்சி சீரியல் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறதா?

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

கடந்த திங்கள் கிழமை கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரி விஜயக்குமாருக்கு 4-ம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தையை பள்ளிக்கு செல்லும் போது காரில் கடத்திவிட்டார்கள் என்ற தகவல் வந்துள்ளது. உடனே மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களை அலாட் செய்து கார் உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த திடீர் சோதனையால் ஒரே பரபரப்பாக இருந்தது.

 

Is the television serial taking children to the wrong direction?



 

இந்தநிலையில் சிதம்பரம் எஸ்பி கோயில் தெருவில் வசிக்கும் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் குழந்தையை சிதம்பரம் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அந்த குழந்தையை அழைத்து நைசாக பேசினார்கள்.

 

 

 

என் பெயர் ஹென்சிகா(9) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடலூர் புதுநகர் தனியார் பள்ளியில் 4-வது படிக்கிறேன். எங்க வீடு கடலூர் முதுநகரில் உள்ளது. எனது அப்பா அமானுல்லா என்றார். நான் காலையில் பள்ளிக்கு செல்லும் போது 4 பேர் என்னை காரில் கடத்தினார்கள். அப்போது நான் சத்தம் போட்டேன். கார் கதவுகள் சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் அவர்கள் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே காரை நிறுத்தினார்கள். அதிலிருந்து தப்பித்து வந்துவிட்டேன் என்று கூறினார்.

 

 


குழந்தை கூறுவதில் சந்தேகம் ஏற்பட்ட காவல் துறையினர் உன்பாக்கெட்டில் என்ன இருக்கு என்று எடுக்க சொன்னபோது கடலூர்-சிதம்பரம் வந்த பேரூந்து பயணசீட்டு இருந்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது சிறிது தயங்கியவாறு பேசிய சிறுமி, அங்கிள் காலையில் செல்போனில் கேம் விளையாடியதற்காக ஸ்கூல் செல்லும்போது அப்பா திட்டினார். அதனால் எனக்கு ஆத்திரம் தாங்க முடியல பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுவிட்டேன். பள்ளிக்கு உள்ளே செல்லாமல் கடலூர் பேரூந்து நிலையத்திற்கு வந்து பேரூந்து மூலம் சிதம்பரம் மாமா வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆனால் மாமா கேக்கும் போது என்னை காரில் கடத்தியதாக பொய் சொன்னதால் என்னை காவல்நிலையத்தில் அழைத்து வந்துட்டாரு என அழுதுள்ளார்.

 

 

 

இதுமாதிரி வருவதற்கு எப்படி உனக்கு தோன்றியது என்று கேட்டதற்கு பள்ளிவிட்டு வந்தவுடன் அம்மா பொம்ம டீவி பார்க்க விடமாட்டாங்க. ஆனா அம்மா டீவியில சீரியல் பார்ப்பாங்க. அதனை நானும் பார்ப்பேன் அதில் ஒரு தொலைக்காட்சி சீரியலில் அம்மா திட்டியதற்காக அந்த பசங்க கோவித்துகொண்டு கிராமத்தில் உள்ள சொந்தக்காரங்க வீட்டுக்கு பஸ் ஏறி போவதை பார்த்தேன். அப்பா திட்டியவுடன் எனக்கு அது நினைவுக்கு வந்துச்சி. அதனால் தான் இப்படி வந்துவிட்டேன் என கண்ணீர் விட்டார்.

அதன் பிறகு தான் பரபரப்பாக காணப்பட்ட காவல்துறையினருக்கு பெருமூச்சே வந்தது. பெண்கள் தான் சீரியலில் முழ்கியுள்ளனர் என்று நினைத்தால், குழந்தைகளும் சீரியலில் வரும் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து கொண்டு இப்படியா செய்வது என பேசிக்கொண்டனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.