Skip to main content

அமைதியா அடிவாங்கு...!! பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

அகஸ்தீஸ்வரத்தில் தனியாகச் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை ஒற்றை ஆளாக அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்  ஒரு பெண்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார். அந்தப் பெண்ணின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் பழக்கடை வைத்திருக்கும் திருமணமான நபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் அந்த நபர் மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

 

The teenager who single-handedly beat up a teenager who had sexually assaulted her

 

அப்பொழுது அவனுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்த அந்த பெண் ஆசை வாரத்தை கூறி  வா என்று வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு குடோன் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வாலிபரும் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர்தான் தெரிந்தது அடி உதை விழப்போகிறது என்று.

தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை அடித்து நொறுக்க தொடங்கினார் அந்தப் பெண். அதுமட்டுமல்லாமல் அந்த வாலிபரை எச்சரித்து திட்டியபடியே அடிக்க வீடியோவும் எடுக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத அந்த நபர் கூரையை பிய்த்துக்கொண்டு வெளியே ஓட முயன்றார். ஆனாலும் விரட்டி பிடித்த அந்த பெண், என்கிட்ட அடி வாங்கிறியா போலீஸ் கிட்ட அடி வாங்கிகிறியா. நான் ஒரு பத்து அடிதான் அடிப்பேன், நேத்துதானே உன்னோட பெண்ணுக்கு சடங்கு முடிஞ்சுச்சு, என்னோட கால்ல எல்லாம் நீ விழ வேண்டாம். அமைதியா அடிவாங்கு, தயவுசெய்து அமைதியா அடி வாங்கு என திட்டியபடி அடித்து இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தனக்கு சாலையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற காமபேர்வழிக்கு பாடம் புகட்ட இளம்பெண் ஒருவர் சரமாரியாக அடித்து, அதனை வீடியோவாக பதிவுசெய்து வெளியிட்ட துணிச்சல் அனைவரின் வரவேற்பையும் பெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்; வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A attack on the police who went to catch a ganja dealer; Exciting scenes released

சென்னை கண்ணகி நகர் சுனாமி நகர்  குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கத்தியால் வெட்டி இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இரண்டு பேரை அவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த கற்களை எடுத்து போலீசாரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள், போலீசாரைக் காப்பாற்ற முயன்றனர். உடனே கடுப்பான அந்தக் கஞ்சா ஆசாமி, அந்தப் பகுதி மக்களுக்கும் மிரட்டல் விடுத்தபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.