Skip to main content

முதலுதவி செய்த சினிமா பாடலாசிரியர் மீது கொலை வழக்கு...விசாரணையில் திடீர் திருப்பம்

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் இருவருக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாக போலீசாரிடம் கொடுக்கப்பட்ட தகவலையடுத்து கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கைது செய்தனர். போலீசார் அங்கு வருவதற்கு முன்பே அந்த நபர் பொதுமக்களால் தாக்கப்பட்டிருந்தார்.

 

Murder case on cinematic songwriter made first aid ... A sudden turn back at trial

 

கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட அவரை அழைத்துச் சென்று விசாரித்த பொழுது ''தான் கொலை செய்யவில்லை'' என்ற வார்த்தைகளை அவர் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார். இந்நிலையில் அதனையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் கைது செய்யப்பட்ட அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல் இருந்ததால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கலாமா அல்லது மனநலம் காப்பகத்துக்கு அனுப்பலாமா என்ற குழப்பத்தில் இருந்தனர் போலீசார்.

 

Murder case on cinematic songwriter made first aid ... A sudden turn back at trial

 

 

இந்த நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்டு கைதான நபரின் படத்தை பார்த்த எழுத்தாளர்கள்  சிலர் காவல் நிலையத்திற்கு வந்து கைதானவருக்கு ஆதரவாக பேச தொடங்கினார். விசாரித்த பொழுது தான் அவர்  பிரபல எழுத்தாளரும், பாடலாசிரியருமான ஜெபிரான்சிஸ் கிருபா என்பது தெரியவந்தது. அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடி குழு, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியவர் கவிஞர் பிரான்சிஸ் கிருபா. திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளரான ஜெ பிரான்சிஸ் கிருபா ஏழு கவிதைத் தொகுப்புகள் மற்றும் புதினங்கள்,கட்டுரைகள், கவிதைகள் என இலக்கியத்தில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

 

Murder case on cinematic songwriter made first aid ... A sudden turn back at trial

 

 

எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளில் நடந்ததது தெளிவாக இல்லாததால் கொலை செய்யப்பட்டவரின் பிரேத பரிசோதனை பற்றிய அறிக்கை கிடைத்த பிறகு தான் இந்த வழக்கில் சரியான நிலைப்பாடு எடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். அதன்பிறகே பிரான்சிஸ் கிருபா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

 

 

இந்த நிலையில் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் உயிரிழந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மிதிப் வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா மீதான கொலை வழக்கை நீக்கி இயற்கை மரணம் என்ற  174  சட்டப் பிரிவில் வழக்கு பதிந்து கவிஞர் பிரான்சிஸ் கிருபாவை விடுவித்தனர்.

 

Murder case on cinematic songwriter made first aid ... A sudden turn back at trial

 

 

 

Murder case on cinematic songwriter made first aid ... A sudden turn back at trial

 

பைரி என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் அதற்காக தாடியுடன் தலையில் நீண்ட முடி வளர்த்து வந்தார். சென்னை கேகே நகரில் தங்கியுள்ள அவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் கோயம்பேட்டில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி விட்டு காய்கறி சந்தையில் நிழலுக்கு ஒதுங்கியுள்ளார் அப்போது அந்த வழியாக வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட அவரை கைகளால் தாங்கி பிடித்துள்ளார். தனது மடியில் கிடத்தி மூச்சுத்திணறலை சரி  செய்ய தனது இரு கைகளையும் நெஞ்சின் மீது வைத்து அழுத்தி முதல் உதவி செய்துள்ளார். இருப்பினும் பலனளிக்காமல் வடமாநில இளைஞர் விழுந்தார். ஆனால் இது  தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு பிரான்சிஸ் கிருபா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கருதி அவரைத் தாக்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.