நாளை மறுதினம் எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தமிழகத்தில் தொடங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
![tec](http://image.nakkheeran.in/cdn/farfuture/FxKmK1plvY4THPiTcZsOP3dgNrHO68awH4uKlX7xex8/1558445348/sites/default/files/inline-images/tamilnadu-ec.jpg)
காலை எட்டு மணிக்கு முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் அதனை அடுத்து 30 நிமிடங்கள் கழித்து வாக்கு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தபால் வாக்கு எண்ணிக்கை நிறைவுக்கு காத்திராமல் மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை முபணீ டித்த பின்னர் இறுதியாக ஒப்புகை வாக்குச் சீட்டு எண்ணப்படும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
அதிகபட்சமாக திருவள்ளூர் தனி தொகுதியில் 34 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று கூறியுள்ளார்.