Skip to main content

ரசாயன மாம்பழங்களா? - மண்டிகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
 Chemical mangoes?-Officials raid

ரசாயன மாம்பழங்கள் விற்கப்படுவதாக வெளியான புகாரைத் தொடர்ந்து திருவள்ளூரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரசாயன ஸ்பிரே அடித்து மாம்பழங்களை பழுக்க வைப்பதாக புகார்கள் இருந்தது. இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாம்பழ மண்டிகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர். கற்கள் மற்றும் ரசாயன ஸ்பிரேக்கள் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் சோதனையானது நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நான் எங்கேயும் இப்படிப் பார்த்ததில்லை' - பானிபூரி வேட்டையில் அதிகாரி ஷாக்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 'I have never seen anything like this anywhere'- Officer Shock on panipuri hunt

அண்மையில் பஞ்சுமிட்டாயில் இடம்பெற்றுள்ள செயற்கை நிறமி புற்றுநோயை உருவாக்கும் கூறுகளைக் கொண்டது எனக் கண்டறியப்பட்ட நிலையில் அவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செயற்கை நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகத்திலும் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் சோதனையைத் தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் செட்டி வீதி பகுதியில் உள்ள 'ஸ்ரீபகவதி அம்மன் பானி பூரி' கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தமாகவும் சில்லறையாகவும் பானிபூரி விற்பனை செய்யும் கடையில் நடந்த ஆய்வில் அதிகாரிகளுக்கு பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தது.

 'I have never seen anything like this anywhere'- Officer Shock on panipuri hunt

கடையின் உள்ளே ஒரு பகுதியின் மூலையில் பானி பூரி கீழே தரைதளத்தில் கொட்டி வைக்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் கிடந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 'ஏங்க இப்படியா பானிபூரிய கீழ கொட்டி வைப்பீங்க? உங்களுக்கே நல்லா இருக்கா இதெல்லாம். சாப்பிடற பொருள் இப்படி கீழ தரையில் கொட்டி வச்சிருக்கீங்க. இதை அப்படியே எடுத்து கவரில் போட்டு கொடுத்து விட வேண்டியதுதானா? அட்லீஸ்ட் ஒரு ட்ரம் அல்லது பாலிதீன் கவருக்குள் போட்டு வைக்க வேண்டாமா?' என அதிகாரி கேள்விகளை எழுப்பினார். ''உடனே இதெல்லாம் சீஸ் பண்ணுங்க? எங்கேயுமே இப்படி பார்க்கலப்பா இப்படி கீழே கொட்டி வச்சிருக்கீங்க. நான் இதை விட சின்னதா பானி பூரி செய்ற இடத்தில் கூட ஆய்வு செய்யப் போயிருக்கேன். அவர்கள் கூட கீழே போட்டது கிடையாது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய்யை ஆய்வு செய்த அதிகாரி 'ஆயில பார்த்தாவே தெரியுது எத்தனை தடவை இதை யூஸ் பண்ணிருப்பீங்க. நீங்களே பாருங்க இந்த ஆயில் எப்படி இருக்குன்னு. ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் ஆயில பயன்படுத்த வேண்டும். தேவையான அளவு ஆயில் பயன்படுத்தி விட்டு பின்னர் அதனை அழித்துவிட வேண்டும் என்று எச்சரித்தார்.

Next Story

“இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி உள்ளது” - ஓ. பன்னீர்செல்வம் பேச்சு!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
O Panneerselvam speech There is Mango with a double leaf 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்ரவாண்டியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

O Panneerselvam speech There is Mango with a double leaf 

இதில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “இரட்டை இலை சின்னம் இல்லையென்றாலும் இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி சின்னம் நம்மிடம் இருக்கிறது. அனைத்து நிலையிலும் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளச்சாராயம், போதைப்பொருள் நிறைந்த ஆட்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், “நானும், ஒ. பன்னீர்செல்வமும் இந்த கூட்டணியில் இருக்கிறோம். எனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் பயன்படுத்த பாமகவிற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.