Skip to main content

பரிதாபமாக 8 ஆண்டுகளாக திருச்சியில் மூடிக்கிடக்கும் சிவாஜி சிலை!

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
actor sivaji ganesan statue


 

திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலையைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரசிகர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. 
 

நடிகர் திகலம் சிவாஜி கணேசன், ஏறத்தாழ முந்நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் பெரும் புகழ் எய்தினார். வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட போராளிகளை நம் கண்முன் நிறுத்தினார். கர்ணன் போன்ற புராண பாத்திரங்களாகத் திரையில் வாழ்ந்து காட்டினார்.


 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். மிக உயரிய விருதான செவாலியே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.


 
அவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. காரணம், தனது இள வயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கினார். பிறகு திரையுலகில் நுழைந்து பல சாதனைகளைப் படைத்தார்.


இந்தச் சிலைக்கான செலவு முழுவதையும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஏற்று சிறப்பாக உருவாக்கினார். அச்சிலையை பாலக்கரை ரவுண்டானாவில் கொண்டு போய் வைத்து திறப்பு விழாவுக்கான தேதியை அறிவிப்பதற்குக் கோரிக்கை வைத்தனர். அந்த நேரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. இதனால்,  சிலை திறப்பு விழா தேதி தள்ளிப் போனது.


 
இந்நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஜெ. முதல்வரானார். மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், 94 அடி உயரமுள்ள சிவாஜியின்  வெண்கல சிலையைக் கடந்த 8 ஆண்டுகளாக துணி போர்த்தி மூடி வைத்துள்ளனர். திறக்கப்படாமலே உள்ளது. 

 

இதற்கிடையில்,  சிவாஜி ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன்பு நள்ளிரவில் தீடீரென சிவாஜி சிலையை மூடியிருந்த துணியை அகற்றினார்கள். அகற்றியவர்களை போலீசார் உடனே கைது செய்தனர். 


 
இந்தச் சூழ்நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு,  நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை மற்றும் அனைத்துக் கட்சியினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தை திருச்சியில் நாளை நடத்தவிருக்கின்றனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில்,  தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப்லூயிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.