Skip to main content

சுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

 

 

தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது.  

 

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவப் படை வீரர் தூத்துக்குடியை  சேர்ந்த சுப்பிரமணியன்  உடல் இன்று சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டுவரப்பட்டு அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  நேரில் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

 

இந்நிலையில் வீரர் சுப்பிரமணியனின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் அடக்கம் செய்யப்பட்டது.   

 

 

சார்ந்த செய்திகள்