Skip to main content

உய்யக்கொண்டான் கால்வாயில் கலக்கும் கழிவுநீர்! சட்டபேரவையில் உண்மையை ஒத்துக்கொண்ட முதல்வர் !

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக்கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாயும் ஆகும். இந்தக் கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு.

விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த இந்தக் கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ள காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான 'உய்யக்கொண்டான்' எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டினர்.

Sewage mixing in the canal in Udayakonda ;chief minister  was the first to acknowledge the truth in the assembly!


பேட்டைவாய்த் தலையிலிருந்து பிரிந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் 8 கிமீ பாய்ந்து வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது இக்கால்வாய். சுமார் 71கி.மீ. நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய் மூலம் 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.

பலநூறு ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்து மக்களுக்கு பலன் கொடுத்து வந்த இந்தக் கால்வாய் காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியில் குப்பைகளும், கழிவுநீரும் கலந்து சாக்கடையாகவே மாறிவிட்டதுதான் பரிதாப நிலை. முப்போகம் விளையக் காரணமான இக்கால்வாயை இப்போது மூக்கை மூடி கடக்கிறார்கள் மக்கள். திருச்சி மாநகரின் பெரும்பகுதி கழிவுநீர் மற்றும் குப்பைகளின் புகலிடம் இக்கால்வாய்தான். இதன்விளைவு கரைகளை மறைத்து வளர்ந்த கருவேல மரங்கள். கால்வாய் முழுவதும் காட்டாமணக்கும், ஆகாயத்தாமரையுமாய் செடி, கொடிகள் மண்டிக் கிடக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில், 11 கோடி ரூபாய் செலவில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கப்படும் என அறிவித்தார். இந்த பணத்தில் இரண்டு பக்கமும் கிணறு போன்று சுவரை கட்டி விட்டனர். தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த இந்த பகுதியில் பெரிய சாக்கடை கிணறு போன்று மாறியது. சுவற்றில் வழியே தவறி விழுந்தவர்கள் தப்பிக்க முடியாமல் 3 பேர் இதுவரை இறந்து உள்ளனர். ஆடு, மாடுகளும் இது விழுந்து இறந்து உள்ளனர். 

 

Sewage mixing in the canal in Udayakonda ;chief minister  was the first to acknowledge the truth in the assembly!


இதற்கு இடையே ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி என்று உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் தொட்டிப்பாலம் (பழைய ஆறு கண் பாலம்) முதல் கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அமைந்து உள்ள செட்டிப்பாலம் வரை ரூ.17 கோடியே 56 லட்சத்தில் மேம்பாடு செய்வது நிதி ஒதுக்கி இதில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை மேம்பாடு செய்யும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கியது. தொட்டிப்பாலம் முதல் செட்டிப்பாலம் வரை உய்யக்கொண்டான் வாய்க்காலின் மொத்த நீளம் சுமார் 2½ கிலோ மீட்டர் ஆகும். 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கும் தற்போது உள்ள சாலையை 15 அடி அளவிற்கு அகலப்படுத்தி அதனை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Sewage mixing in the canal in Udayakonda ;chief minister  was the first to acknowledge the truth in the assembly!

                                                                தண்ணீர் வினோத்

இப்படி உய்யக்கொண்டான் பெயரில் பல கோடிகளை நிதியாக ஒதுக்கி அதை அழகுப்படுத்திக்கொண்டே இருந்தாலும். இதில் சாக்கடை கலக்கிறது இதை தடுக்க வேண்டும் என்றும் இந்த கால்வாயில் 34 இடங்களில் திருச்சியில் சாக்கடை மற்றும் கழிவு நீர் கலக்கிறது என்பதை இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்கிறார்.


இதே போன்று தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி சார்லஸ் நம்மிடம் உய்யக்கொண்டான் சென்னை கூவம் போல் மாறி வருகிறது கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று ஒரு உண்ணாவிரதம் இருந்தேன். திருச்சி மாநகராட்சியே எனக்கு கொடுத்த தகவலில் கழிவு நீர் கலப்பது உண்மை தான் என்னிடம் கொடுத்த பதிலை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் திமுக முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கழிவு நீர் கலக்கிறது என்றும் அது தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சொல்லியிருக்கிறார். 

Sewage mixing in the canal in Udayakonda ;chief minister  was the first to acknowledge the truth in the assembly!


இதற்கு கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்காக பாதாள சாக்கடை கட்டப்படும் என்று சொல்லயிருக்கிறார். இதற்கு 344 கோடி நிதி ஒதுக்கியிருக்கி இருக்கிறோம் என்கிறார். இதில் அந்த பழைய திட்டம் போல் ஊழலும் இல்லாமல் திட்டம் சரியாக நடந்தால் திருச்சி மக்களுக்கு பயன்பெறுவார்கள் என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.