Skip to main content

சேலத்தில் வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

சேலம் பெரிய புதூர் போயர் தெருவைச் சேர்ந்தவர் சிவா. கடந்த நவ. 7ம் தேதியன்று, காட்டூர் ஆட்டோ நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 7 கிராம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.


இதுகுறித்து சிவா, அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர் பெரிய புதூரைச் சேர்ந்த பழனி மகன் வேட்டையன் என்கிற முருகன் (26) என்பது தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

salem thief goondas act arrested police


ரவுடி வேட்டையன் என்கிற முருகன் மீது, நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதம் அழகாபுரத்தைச் சேர்ந்த தனபால் என்பவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதாக ஒரு வழக்கும், கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமாள் என்பவரிடம் கத்தி முனையில் 1200 ரூபாய் வழிப்பறி செய்த வழக்கும் பதிவாகி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.


தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதோடு, சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவித்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனிடம் நேரில் கைது ஆணையை சார்வு செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கரூரில் சிபிசிஐடி விசாரணை நிறைவு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
CBCID investigation completed in Karur

கரூரில் சிபிசிஐடி போலீசார் 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது சோதனை முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு 14 தனிப்படைகள் அமைத்து இந்தியா முழுவதும் தேடிவந்த நிலையில் இன்று காலை முதல் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

CBCID investigation completed in Karur

இன்று கரூர் மணல்மேடு அடுத்துள்ள கூலிநாயக்கனூர் என்ற இடத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், பெட்ரோல் பங்க் ஊழியருமான யுவராஜ் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் இந்தச் சோதனையானது நடைபெற்றது. அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பேரூர் அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ் மற்றும்  புதூர் பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் சோதனையானது நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடத்திய விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டனர். 

Next Story

கடத்தப்பட்ட 15 வயது சிறுமி 30 நாட்களுக்கு பிறகு மீட்பு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 Kidnapped 15-year-old girl rescued after 30 days

கீரமங்கலம் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி 30 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் 15 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் ஜூன் 4 ந் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. பெற்றோர்களும் உறவினர்களும் எங்கு தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கீரமங்கலம் காவல்  நிலையத்தில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில், கொத்தக்கோட்டை அம்மயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த அரங்குளவன் மகன் காமராஜ் (வயது 24) மற்றும் அவரது நண்பன் கோவிலூர் சம்பாமனை சங்கர் மகன் முருகேசன் (23) ஆகிய இருவரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து பழுதான ஒரு மோட்டார் சைக்கிளை புதருக்குள் போட்டுவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சிறுமியை கடத்தி கொண்டு சென்றுள்ளனர் என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீரமங்கலம் போலீசார் சிறுமியை கடத்திய வாலிபர்களின் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் செல்போன் எண்களை ஆய்வு செய்து தலைமறைவாக உள்ள சிறுமி மற்றும் 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். அவர்களது செல்போன் சிக்னல்கள் கிடைக்காமல் திணறிய போலீசார் அடுத்தடுத்த முயற்சிகள் செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமி கோவையில் இருப்பது பற்றிய தகவல் கிடைத்து காவல் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் கீரமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் கணபதி தலைமையிலான போலீசார் கோவைக்கு சென்று சிறுமி மற்றும் அவரை கடத்தி சென்ற காமராஜ் ஆகியோரை மீட்டு கீரமங்கலம் கொண்டு வந்துள்ளனர்.

15 வயது சிறுமி கடத்தப்பட்டு 30 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டதால் உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.