Skip to main content

பெண்களை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டிய 3 பேர் கைது!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

salem district womens beauty parlour owner police


சேலத்தில் ஏழைப் பெண்களைக் குறிவைத்து நிர்வாணப் படம் எடுத்து மிரட்டியதாக அழகுநிலைய உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 


சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் 4- வது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). இவர், வீட்டிலேயே அழகுநிலையம் நடத்தி வருகிறார். அவரிடம் வேலைக்கு வந்த இரண்டு பெண்களை, தன் மனைவியுடன் இணைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அவர்களைப் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார். 

தன்னுடைய நண்பர்களின் பாலியல் இச்சைக்கும் அவர்களைக் கட்டாயப்படுத்தி உள்ளார். நாளுக்குநாள் லோகநாதனிடம் இருந்து தொல்லைகள் அதிகமானதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து சேலம் நகர அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து லோகநாதன், அவருடைய மனைவி ரூபா ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, லோகநாதனை கைது செய்தனர்.
 

 


இது ஒருபுறம் இருக்க, மேலும் இரண்டு பெண்கள் லோகநாதன் மற்றும் அவருடைய நண்பர்களான தாதகாப்பட்டி வசந்த நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்கிற சிவா (36), பங்களா தோட்டம் பராசக்தி நகரைச் சேர்ந்த அஜய் என்கிற பிரதீப் (28) ஆகியோர் மீது புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில் மேற்கூறிய மூவரும் தங்களை ஆபாசப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியதாகக் கூறியிருந்தனர். இதையடுத்து அந்த வழக்கிலும் லோகநாதன் மட்டுமின்றி அவருடைய கூட்டாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதேநேரம், லோகநாதனின் மனைவி ரூபா தலைமறைவாகி விட்டதை அடுத்து, அவரை தேடி வருகின்றனர். காவல்துறை விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. 

லோகநாதன் வீட்டில் அழகுநிலையம் நடத்தி வருவதாகக்கூறி, பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வந்துள்ளார். வெளி உலகுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அழகுநிலையம் நடத்துவதாகக் கூறி வந்துள்ளார். விபச்சாரத்திற்கு இணங்காத பெண்களை மிரட்டி, அவர்களை நிர்வாணமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். 
 

http://onelink.to/nknapp


குடும்ப கஷ்டத்தில் தவிக்கும் பெண்கள், கணவரைப் பிரிந்த மற்றும் கணவனை இழந்த இளம் பெண்களைக் குறிவைத்து லோகநாதனும் அவருடைய நண்பர்களும் நீண்ட காலமாகவே இவ்வாறு நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி வந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் அவர்களுடன் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளையும் ரகசியமாக வீடியோவில் பதிவு செய்துள்ள இவர்கள், மாநகரில் உள்ள சில பெரிய புள்ளிகளிடம் பணம் பறித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றத்திற்கு எல்லாம் லோகநாதனின் மனைவி ரூபா உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் ஓமலூர் கிளைச்சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.