Skip to main content

’’தமிழன்னு சொல்வதெல்லாம் வேஸ்ட்; தெலுங்கன் இல்லாம மந்திரி சபை அமைக்க முடியாது’’ - கொக்கரிக்கும் ராதாரவி

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

 

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

 

 தமிழக -தெலுங்கு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் எம்.ராதாவின் மகன் எம்.ஆர்.ராதாரவி பேசியபோது,  ‘’நான் தெலுங்குகாரன். என் இனம் தெலுங்கு இனம்.  திராவிடம் என்று எடுத்துக்கொண்டால் நான் திராவிடத்தெலுங்கன்.   இளைஞர்களே...’நான் தெலுங்கன்’ என்ற பெருமையுடன் இருங்கள்.  அதில், தவறே கிடையாது. நாம் யார் வம்புக்கும் போகமாட்டோம்.   ஆனால், நாம் யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது.

  

r

 

தமிழன்னு சொல்லுவதெல்லாம் வேஸ்ட்.  என் தெலுங்கு இனம்தானே 40வது ஆண்டுக்கு விழா எடுக்கிறது.   தமிழர்கள் எம்.ஆர்.ராதாவை மறந்துவிட்டார்கள். 

 

தமிழ்நாட்டில் மந்திரிசபை அமைப்பதில் தெலுங்கு இனம்தான் தூணாக இருக்கிறது.  தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் மந்திரி சபை அமைக்க முடியாது.  தேனியில் இருந்து திண்டுக்கல் வரை தெலுங்கர்கள்தான் தேர்தலில் நிற்கிறார்கள்.   விருதுநகர், சிவகாரி, சாத்தூரில் தெலுங்கர்தான் அதிகமாக இருக்கிறார்கள்.   தெலுங்கர்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்.   நம்முடைய இனத்திற்கு யார் ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற முடியும். இதற்கு சான்றுகள் உள்ளன.   

 

அரசியலில் மட்டுமல்ல, தெலுங்கர்கள்தான் கோயம்புத்தூரில் பல மில்களுக்கு அதிபர்களாக இருக்கிறார்கள். சினிமாவிலும்  அதிகம்பேர் தெலுங்கர்தான்.   வாய்ப்பு போய்விடும் என்று அவர்கள் எல்லோரும் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்.  

 

மற்றவர்களுக்காக கத்தியதுபோதும்.  இனி நமக்காக, நம் இனத்துக்காக கத்துவோம்’’என்று தெரிவித்தார்.   


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒருநாள் உண்ணாவிரதம்... ட்ரெண்டிங்கில் 'ரெண்டு அக்யூஸ்ட் பிஜேபி'

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

Fasting for a day... Trending 'Rendu Acust BJP'

 

திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பாக இன்று பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தவகையில் சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த ராதாரவி பேசினார்.

 

அப்போது அவர், “அண்ணாமலையை இன்று இவ்வளவு பெரிய ஆளாக வளர்த்துவிட்டது திமுக நபர்கள்தான். நாம் அதற்காக அவர்களிடம் நன்றியோடு இருக்க வேண்டும். எந்த நேரமும் போய்விடுமென்று (ஆட்சி) அவர்களுக்குத் தெரியும். எப்போது ஓலை வருமென எதிர்பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் செய்தோம். அதிலும் பெருந்தன்மையாக அவ்வளவு எம்.எல்.ஏ.க்களை வைத்துகொண்டும் துணை முதல்வர் பதவியைத் தான் வாங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே இரண்டே இரண்டு பெரிய அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள். ஒன்று மோடி, மற்றொன்று அமித்ஷா” என்று தெரிவித்துவிட்டு கொடுமையான சொல்கொண்டு அதனை விவரித்தார்.

 

jj

 

மேலும் பேசிய அவர், “பத்தாயிரம் முறை ஒன்றிய அரசு என்றாலும், திராவிட மாடல் என்றாலும் சரி அதனை கண்டுக்கவே மாட்டோம். யாரோ ஒருவர் உங்களை தட்டிவிடுகிறார்கள். அவரைத் தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று பேசினார்.  மகாராஷ்டிரா சம்பவம் குறித்து பெருமையாக அவர் பேசியபோது அருகிலிருந்தவர்கள் குறுக்கிட்டு திருத்தம் செய்ய முற்பட்டனர். அப்போதுதான் அவர், பெருந்தன்மை குறித்துப் பேசி அந்த விவகாரத்தை மடை மாற்றினார்.  

 

இந்த நிலையில் இந்திய அளவில்  #ரெண்டு_அக்யூஸ்ட்_BJP என்பது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

 

 

Next Story

நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்!

Published on 30/11/2019 | Edited on 30/11/2019
r

 

பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்.

சென்னை வந்த ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ராதாரவி.