Skip to main content

சொந்த நிலத்தில் நின்றதற்காக போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு... துப்பாக்கி ராமநாதன் கைது! 

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

இந்து மகாசபா அமைப்பின் துணைத் தலைவராக உள்ளவர் ராமநாதன். இவர் கையில் துப்பாக்கியுடன் உலா வருவதால் அப்பகுதி மக்களால் துப்பாக்கி ராமநாதன் என்ற அடைமொழியுடன் சுற்றி வந்துள்ளார். இவருக்கு செங்குன்றத்தில் உள்ள சோலை நகர் பகுதியில் சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றது.

 

gun


அந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த புதுப்பேட்டை ஆயுதக் காவல் படையில் காவலராக பணியாற்றி வரும் வெற்றிவேல் என்ற ஆயுதப்படை காவலர் அவருடைய நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் வந்த துப்பாக்கி ராமநாதன் என் இடத்தில் நின்றுகொண்டு என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என வெற்றிவேலிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் வெற்றிவேல் தான் ஒரு போலீஸ் என அறிமுகப்படுத்திய பின்னரும் துப்பாக்கி ராமநாதனுக்கும் வெற்றிவேலுக்கும்  வாக்குவாதம் முற்றியது.

 

gun


ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராமநாதன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வெற்றிவேலை குறிபார்த்துவிட்டு தரையை நோக்கி சுட்டுள்ளார். அங்கிருந்து தப்பியோடிய வெற்றிவேல் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுக்க போலீசார் அங்கு சென்று துப்பாக்கி ராமநாதனை கைது செய்ததோடு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

மணிப்பூரை பூர்விகமாக கொண்ட ராமநாதன். நின்றுபேசியதற்கு மட்டுமல்ல சில ஆண்டுகளுக்கு முன்பு காரில் சென்றபோது தன் காருக்கு முன்னே சென்ற பேருந்து வழிவிடாததற்கு ஆத்திரமடைந்து  துப்பாக்கியால் பேருந்தை நோக்கி சுட்டுள்ளார். அப்போதே கைது செய்யப்பட அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டாலும் மீண்டும் மணிப்பூர் சென்று துப்பாக்கி வாங்கி வந்துள்ளார். அதேபோல் இவர் மீது செம்மரக்கடத்தல் வழக்கும் உள்ளது.

 

gun


தற்போது ஆயுதப்படை காவலரை சுட முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துப்பாக்கி ராமநாதன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.