Skip to main content

’அவுட்லுக் பத்திரிகையத்தான் மன்னிப்பு கேட்கச்சொல்ல வேண்டும்’-பழ.கருப்பையா

Published on 23/01/2020 | Edited on 23/01/2020
ப்

 

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதற்கு அதிமுக அமைச்சர்கள் ரஜினிக்கு எதிராக பேசி வரும் நிலையில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் பழ.கருப்பையா ரஜினிக்கு ஆதரவாக கருத்து  தெரிவித்துள்ளார்.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரஜினி விவகாரம் குறித்த கேள்விக்கு,   ’’கருத்தை கருத்தால் மட்டுமே வெல்ல முடியும்.  ரஜினிகாந்த் அவுட்லுக் பத்திரிகையில் வந்ததைத்தான் கூறினேன் என்று கூறுகிறார்.  அதற்கு ஏன் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்.   அப்படி ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முதலில் அவுட்லுக் பத்திரிகையத்தான் மன்னிப்பு கேட்கச்சொல்ல வேண்டும்.    எது பேசினாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பொறுமை இல்லாத நிலைக்கு இந்த நாடு வந்துள்ளது’’என்று கூறினார்.

 

அவர் மேலும்,  ‘’ரஜினிகாந்தை பார்த்து அச்சம் உள்ளது.  அதனால்தான் அவர் எது சொன்னாலும் அஞ்சுகின்றனர்.  ரஜினி கூறிய கருத்துக்கு தெளிவாக மறுப்பு சொன்னால் அத்துடன் அந்தக் கருத்து அடிபட்டு போய்விடும்.  தங்களுடையை கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி மக்களின் மனதை மாற்றி அந்த கருத்துக்கு எதிரான கருத்தை உருவாக்குகின்ற ஆளுமை இன்றைக்கு தலைவர்களிடம் இல்லை’’என்றும் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்