Skip to main content

பேட்டி வாங்கலியோ பேட்டி! ரவுண்டு கட்டி அடிக்கும் ராஜேந்திரபாலாஜி!

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இந்தத் தேர்தல் களத்தில் பேட்டி என்ற பெயரில்,  ஒவ்வொரு நாளும் தினுசுதினுசாகப் பேசி வருகிறார். விருதுநகர், தென்காசி பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி என, போகும் இடமெல்லாம் இஷ்டத்துக்குக் கொட்டித் தீர்க்கிறார். ஆவேசமாகவும் காமெடியாகவும் பேசினாலும் யதார்த்தம் உள்ளதால் சுவாரஸ்யமாக இருக்கிறது.  செய்தியாளர்கள் கேள்விக்குமேல் கேள்வி கேட்டாலும், சளைக்காமல் பதிலளிக்கிறார். இன்று அவர் எடுத்துவிட்ட அரிய பெரிய கருத்துக்களைப் பார்ப்போம்.  

 

r

 

ஓட்டுக்காக ராகுல்காந்தி சொல்லும் பொய்! 
    
மாசம் ஆறாயிரம் ரூபாய்ன்னா.. வருஷத்துக்கு எழுபத்திரண்டாயிரம்.. ஓஹோ.. யாருக்கு தரப்போறாங்க? இப்படியே பேசிக்கிட்டிருந்தா.. நாங்க ரெண்டு லட்சம் தருவோம்னு சொல்லிருவோம். ஏமாத்துறதுக்கு ஒரு அளவு வேண்டாமா? மாசம் ஆறாயிரம் கொடுக்க முடியுமா? கஜானால எங்கே பணம் இருக்கு. பணம் இருந்தா சொல்லணும். எங்கே பணம் இருக்கு? இன்னைக்கும் எல்லா பட்ஜெட்டும் துண்டு பட்ஜெட்தான் போட்டுக்கிட்டிருக்காங்க. பற்றாக்குறை பட்ஜெட்தான் போட்டுக்கிட்டிருக்காங்க. ராஜீவ்காந்தி (ராகுல்காந்தியின் தந்தை பெயரைத் தவறாகக் குறிப்பிடுகிறார்.) சொல்லுறது மிகப்பெரிய மோசடி.. சீட்டிங்.. 72000 ரூபாய் வருஷத்துக்கு எப்படி கொடுக்க முடியும்? ஏழை மக்களை, எளிய மக்களை, விவசாய மக்கள்கிட்ட பொய்யைச் சொல்லி ஓட்டு வாங்க பார்க்கிறாரு. 

 

மோடி எத்தனை மோடியடி!

மோடி வந்து இந்தியாவுடைய கதாநாயகன். இந்தியாவைப் பாதுகாக்கக்கூடிய ஒரு ஸ்டண்ட் மாஸ்டர். இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னால், மல்லுக்கட்டக்கூடிய ஒரு மல்யுத்த வீரர் நரேந்திரமோடி. அவரை எதிர்க்கக்கூடியவர்களுக்கு, சமூக விரோதிகளுக்கு, அவர் வில்லனாத் தெரியுறாரு. அதுக்கு நம்ம என்ன செய்யமுடியும்?

 

கடவுள் விஷயத்தில் ஏமாற்றுகிறார் மு.க.ஸ்டாலின்!

கடவுளை வேண்டுவது பாராட்டுக்குரியது. ஒரு நம்பிக்கையோடு அந்தம்மா வேண்டுறாங்க. அவங்க ஜெயிக்கிறாங்க.. தோற்கிறாங்க.. அதுவேற விஷயம். கடவுள் மேல பக்தியுள்ள கலைஞரோட மனைவியாரே வந்து வணங்குறது ஒரு திருப்புமுனைதான். தயாளு அம்மாவும் பெரிய செந்துருக்கப்பொட்டு வச்சிருக்காங்க. அவங்களும் கடவுளைத்தான் வணங்குறாங்க. கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டு ஸ்டாலின் போன்றவர்கள் ஏமாத்து பண்ணுறாங்க. அதெல்லாம் வீரமணியெல்லாம் தாலி அறுக்கிறாரு. தாலி அறுக்கிறவரை கூட வச்சிக்கிட்டு ஓட்டு கேட்டுப்போனா.. யாராச்சும் ஓட்டு போடுவாங்களா? எந்தப் பெண்ணாவது ஓட்டு போடுமா?

 

ra

 

வைகோவிடம் பிளாக்மெயில்!

மு.க.ஸ்டாலினை என்ன சொன்னாரு? கவுன்சிலர் தேர்தல்ல நிக்கிறதுக்குக்கூட உனக்குத் தகுதி கிடையாது. உன் கட்சிய அழிக்கிறதுதான் என் வேலை. தமிழர்கள் சாவுக்குக் காரணம் நீதான். முள்ளிவாய்க்கால்ல தமிழர்கள் சாவுக்குக் காரணம் காங்கிரஸ்தான்னு சொன்ன எத்தனை சிடி எங்ககிட்ட இருக்கு. போட்டுக் காட்டவா? ஸ்டாலினைப் பத்தி அவரு பேசினத. அதுனால வைகோ சொல்லுறத யாரும் பொருட்படுத்த வேண்டாம். அவர் ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டாரு. அது என்ன இக்கட்டுன்னு நாங்களும் தேடிக்கிட்டிருக்கோம். வைகோ எதுல சிக்கிட்டாருன்னு தெரியல. அவரை ஏதோ பிளாக்மெயில் பண்ணிக் கிட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன். பிளாக்மெயில் பண்ணித்தான் அவரை இப்படி பேச வைக்கிறாங்க. 

 

சர்வாதிகாரி தினகரனை குடும்பத்தினரே மதிப்பதில்லை!

குக்கர் கேளுங்க. மக்கர் கேளுங்க. இல்லைன்னா தொப்பி கேளுங்க. டிவிகூட கேளுங்க. என்னமும் கேளுங்க. அவங்கபாட்டுக்கு தனித்தனிச் சின்னத்துல நிற்கட்டுமே. அவங்களுக்கு திறமை இருக்குல்ல. ஒண்ணுல வடைச்சட்டில நிற்கட்டும். ஒண்ணுல தென்னை மரத்துல நிற்கட்டும். சின்னத்தை பத்தி பிரச்சனை கிடையாதுன்னு சொல்லிட்டருல்ல டிடிவி. அவரு என்ன புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரா? அவரு குடும்பத்துல மாமனே இவரை  மதிக்கமாட்டாரு. டிடிவிய அவரு மாமன் மதிக்கமாட்டாரு; மச்சான் மதிக்கமாட்டாரு. அவரு குடும்பத்துல யாரு இவரை மதிக்கிறாங்க? டிடிவி தினகரன் ஒரு சர்வாதிகாரி மாதிரி நடந்துக்கிட்டிருக்காரு. அவருகூட இருக்கிற ஆளுங்க நொந்துபோய் கிடக்கிறாங்க. அவங்கள பூராம் மெஸ்மரிசம் பண்ணி.. நீதான் எம்.எல்.ஏ., நீதான் மந்திரி.. நீதான் பொதுப்பணித்துறை மந்திரி.. நீ உள்ளாட்சித்துறை மந்திரி.. நீ சமூக நலத்துறை மந்திரி.. பொம்பளையாள பார்த்தா சமூக நலத்துறை மந்திரி. ஆம்பளையாள பார்த்தா பொதுப்பணித்துறை மந்திரி. என்னது? இப்படியே சொல்லி ஆளாளுக்கு மந்திரி.. மந்திரின்னு கனவு கண்டுக்கிட்டு ட்ரெயின்லபோயி முட்டிக்கிட்டிருக்கான். 

 

v

 

என் சொத்து உனக்கு; உன் சொத்து எனக்கு! 

என் சொத்து எல்லாத்தயும் சாத்தூர் அமமுக வேட்பாளர் சுப்பிரமணிக்கு எழுதிக் கொடுத்துடுறேன். அவரோட பினாமி சொத்தையெல்லாம் எனக்கு எழுதிக்கொடுக்கச் சொல்லுங்க. நான் ஏற்கனவே வந்து.. முன்னாடி கட்டுன வீட்டுலதான் குடியிருக்கேன். என் வீடு எவ்வளவு பெரிசுன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். பத்து பேருதான் உட்காரலாம். அவருக்கு ஏழுமாசம் எம்.எல்.ஏ.வா இருந்துட்டு எவ்வளவு சொத்து. சும்மா சொல்ல வேண்டியதுதான் குற்றச்சாட்டுன்னு. அவரைப் பத்தி அவங்க கட்சிக்காரங்களுக்கே தெரியும். யாருக்கும் கடுங்காபி வாங்கித்தர மாட்டாரு. பணம் கொடுத்தா ஓடியே போயிருவாரு. கொடுக்கிற பதவியை ஏத்துக்கிருவாரு. யாரு கூட கேட்கிறாங்களோ வித்திருவாரு.  

தேர்தல் சீசனில் கே.டி.ராஜேந்திரபாலாஜி போன்றவர்களின் பேச்சு வாக்காள பெருமக்களுக்கு  ‘டைம்பாஸ்’ ஆக இருக்கிறது.  

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.