Skip to main content

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் மூலம் கலைஞர் நல்ல நிலையில் இருக்கிறார்: ஆ.ராசா பேட்டி

Published on 29/07/2018 | Edited on 29/07/2018

 

திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, 


திமுக தலைவர் கலைஞர் உடல்நிலையில் தற்காலிகமாக சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் மூலம் பின்னடைவு சீர்செய்யப்பட்டு, கலைஞர் நல்ல நிலையில் இருக்கிறார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்