Skip to main content

பட்டப்பகலில் நடுரோட்டில் அரிவாளுடன் ஒருவரை விரட்டிய சம்பவம்... அச்சத்தில் மக்கள்!!! 

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 4 பேர் கொண்ட கும்பல் கையில் பெரிய அரிவாள்கள் மற்றும் கத்தியுடன் ஒரு நபரை வெட்டுவதற்கு விரட்டிச்சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

pudukottai


ஆலங்குடி அரசமரம் பகுதியில் நேற்று பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று யாருடைய வருகைக்காகவோ நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு நபரை அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியுடன் வெட்டுவதற்காக விரட்டியது. அந்த நபர் அவர்களிடமிருந்து உயிர்  தப்பிக்க அங்கிருந்து வடகாடு முக்கம் பஸ் ஸ்டாப் வரை சுமா் 500 மீட்டர் தூரம் ஓடினார். அவரை பின்தொடர்ந்து அந்த கும்பல் தொடர்ந்து விரட்டிச் சென்றது. அப்போது, அந்த நபர் தான் வைத்திருந்த செல்போனில் யாருக்கோ தகவல் கொடுத்துக் கொண்டே ஓடினார். 

வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரசமரம் பஸ் ஸ்டாப் வந்துள்ளார். அப்போது இவரின் நண்பர்கள் கையில், கட்டையுடன் நின்றனர். இதனைக்கண்ட 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதேபோல் மற்றொரு கும்பலும் அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார் தப்பியோடிய இரு கும்பல்களையும் தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிப்பறிகள் ஏராளம் நடந்த நிலையில், தற்போது பட்டப்பகலில் அரிவாளுடன் கடைவீதியில் ஒருவரை விரட்டிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.