Skip to main content

பாமக தலைவராக 25 ஆண்டுகள்... ஜி.கே. மணிக்கு 24ம் தேதி பாராட்டு விழா!

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

்ுிர

 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை மறுநாள் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. சென்னை சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு பாராட்டு விழா தொடங்குகிறது.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். விழாவுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதலமைச்சர் தனி பிரிவில் பாமக எம்எல்ஏக்கள் மனு (படங்கள்)

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் இன்று (21.04.2023) பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

 

 

Next Story

"பல்வீர் சிங் இன்னும் கைது செய்யப்படவில்லை" - ஜி.கே. மணி எம்.எல்.ஏ

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

pmk gk mani mla talks about balveer singh incident at assembly  

 

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நேற்று சட்டப் பேரவையில் நடைபெற்றது.

 

காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மற்றும் அவற்றின் மீது முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை கொடுத்து உரையாற்றினார். இந்நிலையில் பாமகவை சேர்ந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில், "மக்கள் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு சட்ட  திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. பல்வேறு துறை வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை தொகுதி மேம்பாட்டு நிதிக்கு பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

 

மேலும் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பல் உடைக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இன்னும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தான் நடந்து கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் ஊதியத்துக்காக பணியாற்றாமல் நாட்டுக்காக பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருளை ஒழிக்க தனிப்படை அமைக்க வேண்டும்" என்று பேசினார்.