Skip to main content

“மக்களுக்கு பரிசு, பணம் கொடுக்கும் கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய தயாரா?” - நாம் தமிழர் பெண் வேட்பாளர் கேள்வி 

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

"Is the party ready to disqualify the candidates who give gifts and money to the people?" - Naam Tamilar female candidate question

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நாம் தமிழர் கட்சி கடந்த 20 ஆம் தேதி உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், அதனை மீறி ஆலமரத் தெருவில் பரப்புரை மேற்கொண்டதாகத் தேர்தல் பறக்கும் படையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைப் பெற்ற ஈரோடு தெற்கு காவல்துறையினர் 171F என்ற பிரிவின் கீழ் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுத்த நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் மேனகா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கடந்த 20 ஆம் தேதி திண்ணை பிரச்சாரம் செய்வதற்காக நான் போயிருந்தேன். அதற்கான அனுமதி  வாங்கவில்லை என்று என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே தேர்தல் ஆணையம் திண்ணை பிரச்சாரம் செய்வதற்கு வேட்பாளர்கள் அனுமதி வாங்க தேவையில்லை என வாய்மொழியாக சொல்லி இருந்தார்கள். அதனால் பரப்புரை செய்து கொண்டிருக்கிறோம். வரப்போகிற நாட்களில் எல்லா இடத்திலும் நான் பரப்புரை செய்து மக்களை சந்திப்பேன். அதற்கான அனுமதி வேண்டி நான் மனு கொடுத்துள்ளேன். என்னுடைய கேள்வி என்னவென்றால் திமுக எல்லா வார்டிலும் பிரச்சாரம் செய்கிறார்கள். மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் வாங்கிய அனுமதி கடிதத்தை எங்களிடம் காட்டுங்கள் என்று சொன்னால் எங்களிடம் அந்த அனுமதி கடிதம் இல்லை இரண்டு மணிக்கு மேல வாங்க காட்டுகிறேன் என்று சொல்கிறார்கள். இரண்டு மணிக்கு மேல் அனுமதி கடிதத்தை கொடுக்கிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் இதற்கு மேல் ரெடி பண்ணி கொடுக்கப் போகிறார்கள் என்று அர்த்தம்.

 

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு முக்கிய ஆதாரம். மக்களுக்கு எல்லா விதமான பரிசு பொருட்கள், பணம் எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதன் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையிலேயே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் இந்த கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு மக்களை சந்திக்க போன என் மீது ஏன் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மற்ற கட்சிகளைப் போன்று எங்களையும் நடத்துங்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.