Skip to main content

சிலை கடத்தலில் பழனிசாமி? அந்த இரு அமைச்சர்கள் யார்? - புகழேந்தி

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

"Palaniswami in idol smuggling? Who are those two ministers?” - Praise

 

திருவள்ளூர் துணை கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக செயல்பட்ட பொன் மாணிக்கவேல் மீது குற்றவாளியைத் தப்பிக்கவிட்டார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ள உத்தரவிட்டது.

 

கடந்த 6 ம் தேதி பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது பெரிதாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.மாணிக்கவேல் இக்குற்றச்சாட்டினை முற்றிலுமாக மறுத்தார். 

 

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பொன் மாணிக்கவேல் மிகச்சிறந்த அதிகாரி. நான் அவருடன் பழகியவன். காவல்துறையில் உண்மையான அதிகாரியாக விளங்கியவர் அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இவர் சிலை கடத்தல் பிரிவிற்குள் போன பின்புதான் பல உண்மைகளைச் சொன்னார். 2019 ஜூலை 24ம் தேதி உயர்நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை மாற்ற வேண்டும் எனச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் நாடினார்.

 

அதே நாள் பொன் மாணிக்கவேலின் வழக்கறிஞர், தமிழகத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறது எனக் கூறினார். ஆகவே எடப்பாடி பழனிசாமி பொன் மாணிக்கவேலின் விசாரணையைத் தடுத்து சிபிசிஐடிக்கு மாற்றி அந்த இரு அமைச்சர்களைக் காப்பாற்ற இவ்வாறு செய்கிறார். 

 

தமிழக மக்கள் வணங்கும் கடவுள் சிலைகளைக் கடத்துவதற்கு யார் யார் முற்பட்டார்களோ அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுத்ததாகப் பொன் மாணிக்கவேல் சொல்கிறார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவரை மாற்ற முயன்றது, சட்டமன்றத்தில் அதைப் பற்றிப் பேசியது பழனிசாமி தான். 

 

இப்பொழுது எனது கேள்வி எல்லாம் அந்த இரண்டு அமைச்சர்கள் யார்? அதில் பழனிசாமியும் இருக்கிறாரா? என நான் சந்தேகப்படுகிறேன். பொன் மாணிக்கவேல் அதைத் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூருவில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து போட்டி!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Football match on MGR's birthday in Bengaluru

பெங்களூர் ஸ்ரீ ராமபுரம் டாக்டர் அம்பேத்கர் மைதானத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து போட்டி மாநில அளவில் நடைபெற்றது. இந்த கால்பந்து போட்டியை சாந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் ஹாரீஸ் துவக்கி வைத்தார்.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாநில செயலாளர் கே. குமார் தலைமையில் ஒளி வெள்ளத்தில் (Flood Light) நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற சி ராமாபுரம் கால்பந்து வீரர்கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். முதல் பரிசாக இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. குக்ஸ் டவுனை சார்ந்த வீரர்கள் இரண்டாவது பரிசினை பெற்றனர். அவர்களுக்கு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணியினருக்கு கழக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு கோப்பைகளையும் பரிசையும் வழங்கினார். எம்.எஸ்.வி. அஸ்வித் சவுத்ரி, சுரேஷ் சந்திரா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த கால்பந்து போட்டிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.

Next Story

திடீரென கண் கலங்கிய ஓபிஎஸ்; காரணத்தை சொல்லி வேதனைப்பட்ட புகழேந்தி

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

Sudden blurred vision OPS; Pugazendi was distressed by telling the reason

 

ஓபிஎஸ் தாயாரின் மறைவின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உடன் இருந்த கணத்தை அவரது ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

 

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் வயது முதிர்வு காரணமாக ஓரிரு தினங்கள் முன் காலமானார். நேற்று முன் தினம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி காசி கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தேனி பெரிய குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓபிஎஸ் தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி இருந்தார்.  

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, “ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் இறப்பதற்கு முதல் நாள் என நினைக்கிறேன், மதியம் ஓபிஎஸ் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அப்பொழுது தீர்ப்பு வந்தது அவருக்கு தெரியும். பேசிக்கொண்டு இருக்கும் போதே கண் கலங்கினார். காரணம் கேட்டபோது, ‘அம்மாவுக்கு நினைவு தப்பிவிட்டது என்னையும் பிறரையும் அடையாளம் காண முடியவில்லை’ என்றார். இந்த நேரத்தில் ஏன் விட்டுவிட்டு வந்தீர்கள் என கேட்டோம். ‘இந்த நேரத்தில் வரவில்லை என்றால் பன்னீர்செல்வம் பயந்துவிட்டார் என சொல்லுவார்கள்’ என்றார். அப்பொழுதே அவரது மனம் சங்கடப்பட்டது. திருச்சி வந்து இறங்கிய போது அவரது தாய் இயற்கை எய்திவிட்டார் என செய்தி வந்தது.

 

யாரோ ஒரு நிருபர் கேட்ட பின் பழனிசாமி இதற்கு வருத்தம் தெரிவிக்கிறார். முன்னாள் முதல்வரின் தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்த பின்னும் தன் மனநிலையை காரணம் காட்டி சர்வாதிகார போக்கில் அதை எடுத்துச் செல்லும் நபரை என் வாழ்நாளில் நான் பார்த்தது இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் எது சொன்னாலும் 100% சரியாகத்தான் இருக்கும். அவர்தான் தற்போது பாஜகவை நம்பி பயன் இல்லை என்கிறார். அதைத்தான் நீங்களும் பார்க்கிறீர்கள். மிகப் பெரிய பேரிழப்பில் இருக்கிறோம். இது முடியட்டும். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை பார்ப்பீர்கள்” என்றார்.