Skip to main content

தங்கத்தின் விலையுடன் போட்டி போடும் வெங்காயத்தின் விலை!!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

ஒரு காலத்தில் இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கு முக்கியகாரணமாக இருந்த வெங்காய விலை உயர்வு, தற்போது பொதுமக்களின் மீது அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டள்ளது.
 

onion

 

 

ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் தவறாது இருக்கும் பொருள் வெங்காயம். நாட்டின் முக்கிய உணவுப்பொருளாக இருக்கும் வெங்கயாத்தின் விலை கடந்த 2 மாதங்களில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை அருகில் உள்ள அனைத்து அழுகும் பொருள்களின் கமிஷன் மண்டியில் கடந்த ஜீலை மாதம் இறுதியில் 50 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.800 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் 1000, 1300, 1600 என படிப்படியான உயர்ந்து காணப்பட்டது.

இந்நிலையில், தற்போது, மூன்று மடங்கு விலை உயர்ந்து ரூ. 2400க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும், சின்னவெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால், வெங்காயத்தை நம்பி தொழில் செய்யும் சிறு, குறு வணிகர்கள் முதல் பெரும் வணிகர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையான பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து வெங்காய வியாபாரி கூறுகையில், தமிழகத்திற்கு பெரும்பாலும் வடஇந்தியாவில் இருந்தே வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் அங்கு ஏற்றபட்ட மிகக்கடுமையான மழைப்பொழிவு காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் பரவலாக மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, லாரிகள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் வெங்காயத்தின் விலை தற்போது, கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதனால், நுகர்வோர்களின் வருகையும் குறைந்துள்ளது. கடந்த 2 மாதங்களாகவே வெங்காயத்தின் அடக்க விலை கிடைத்தால் போதும் என வியாபாரம் செய்து வருகிறோம்.

இது பற்றி சிறு வணிகர் ஒருவர் கூறுகையில், டீ கடையில் பஜ்ஜீ, போண்டா போன்ற உணவுவகைகளையும் விற்பனை செய்து வருகிறேன். மழைப்பொழிவு ஏற்பட்டால் வெங்காய விலை உயர்வு என்பது இயல்பான ஒன்றே. ஆனால், இந்த அளவிற்கு உயரும் என்று நினைக்கவே இல்லை. பால் விலை உயர்வால் டீயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வெங்காயத்தின் விலைஉயர்வால் திண்பன்டங்களின் விலையும் உயர்த்த வேண்டிய நிர்பந்தம் எழுகிறது. ஆனால், விலையை உயர்த்தினால் மக்கள் யாரும் வாங்க முன்வரமாட்டார்கள். எனவே, திண்பன்டங்களை வெங்காய விலை குறையும் வரையில் உற்பத்திசெய்யமால் இருப்பதே நல்லது என முடிவெடுத்துள்ளேன். இதனால், நிச்சயம் வியாபாரம் குறையும். இருப்பினும், வேறு வழி இல்லை. தங்கத்திற்கு நிகராக வெங்காயம் விற்றால் சிறு வணிகர்கள் என்ன செய்யமுடியும் என்கிறார் கவலையுடன்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.