Skip to main content

டாஸ்மாக் பணம் கொள்ளை ! புகார் கொடுத்த ஊழியர்களுக்கு போலீஸ் செம கவனிப்பு ! 

Published on 05/11/2018 | Edited on 05/11/2018
ta

 

திருச்சி தோகமலை மெயின்ரோட்டில் வாழை ஆராய்ச்சிமையம் அருகே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.  இந்த கடையில் முசிறியை சேர்ந்த திரவியம் என்பவர் சூப்பர் வைசராக வேலை செய்கிறார்.

 

முசிறியை சேர்ந்த தமிழரசன், கே.கள்ளக்குடியை சேர்ந்த மணிவேல் ஆகியோர் சேல்ஸ்மேனாகவும், குணசேகரன் என்பவர் உதவி சேல்ஸ்மேனாகவும் பணிபுரிகிறார். கடந்த சனிக்கிழமை திரவியம் விடுமுறை என்பதால் தமிழரசன், மணிவேல், குணசேகரன் ஆகியோர் டாஸ்மார்க் விற்பனையை முடித்து விட்டு கடையை பூட்டி 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயை டூவிலரில் வைத்துக்கொண்டு திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். தாயனூர் வாழை ஆராய்ச்சி மையத்தை தாண்டி செல்லும் போது முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் டாஸ்மாக் ஊழியர்கள் சென்ற டூவிலரை மறித்தர். 

 

அப்போது அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார்கள். இது குறித்து சோமரசம் பேட்டை காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் சந்தேகப்படும் படி நபர்கள் இருந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று சொல்லியிருந்தனர். இதையடுத்து 2 பேரை சந்தேகப்படுகிறோம் என்று அடையாளம் காட்டினார். அடையாளம் காட்டப்பட்ட அந்த 2 பேரையும் அழைத்து வந்து போலிஸ் விசாரித்து பிறகு அனுப்பி வைத்தனர். போலிஸ் விசாரணை முடித்து வெளியே சென்ற அந்த நபர்கள் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டியிருக்கிறார்கள். 

 

இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் தயனூர் கடையிலிருந்து வேறு கடைக்கு மாற்ற டாஸ்மாக் மண்டல மேலாளருக்கு கோரிக்கை வைத்தனர். 

 

இந்த நிலையில் போலிசார் திடீர் என விசாரணைக்கு டாஸ்மாக் ஊழியர்களை அழைத்தனர். இதில் முதலில் போலிஸ்நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த மணிவேலை விசாரித்துவிட்டு கடைக்கு அனுப்பினார்கள். 

 

அதன் பிறகு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் தமிழரசன், குணசேகரன் ஆகியோரை போலிசார் விசாரணைக்கு உட்படுத்தி கடுமையாக தாக்கியிருக்கிறார்கள் இதில் காயம் அடைந்த இரண்டு பேரும் சிகிச்சைக்கா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

புகார் கொடுத்தவர்கள் மீது போலீஸில் சந்தேகப்பார்வை திரும்பியிருப்பது டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.