Skip to main content

மதவெறியை தூண்டி அரசியல் செய்கிறார்கள்! பா.ஜ.க. மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுக தாக்கு!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022


 

They incite sectarianism and do politics! BJP Chief Minister MK Stalin's indirect attack on!

 

தமிழக அரசு மீது குறை சொல்ல முடியாத சிலர், மதவெறியை தூண்டி அரசியல் செய்கிறார்கள் என்று பா.ஜ.க.வை மறைமுகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

 

சேலம் மாவட்டம், ஆத்தூரில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், செவ்வாய்க்கிழமை (மே 24) நடந்தது. தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  

 

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், சிவசங்கர், சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "கடந்த சட்டமன்றத் தேர்தலில், சேலம் மாவட்டமானது திமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனாலும், தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை இந்த மாவட்டத்தில் பெற்றிருக்கிறோம்.100 சதவீத வெற்றியை அடுத்தடுத்து வரும் தேர்தலிலும் பெறப்போகிறோம் என்ற நம்பிக்கையை, இந்த கூட்டத்தைப் பார்க்கும் போது உணர முடிகிறது. 

 

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நேரத்தில் எனக்கு ஒருவிதமான பயம் இருந்தது. என்ன காரணம் என்றால், கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகம் அனைத்து துறைகளிலும் பாதாளத்திற்கு போயிருந்தது. அதை ஓராண்டு காலத்தில் சீர் செய்ய முடியுமா? என யோசித்துக் கொண்டிருந்தேன். தமிழ்நாட்டின் நிதிநிலை மிக மிக கவலைக்கிடமாக இருந்தது. 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருந்தது.

 

இதுதான் என் மனதில் கடந்த ஆண்டு மே மாதம் இருந்த தயக்கங்கள். ஆனால், இன்று தமிழ்நாட்டை தலை நிமிரச் செய்திருக்கிறோம். அதை நான் தலை நிமிர்ந்து சொல்கிறேன். வீழ்ந்து கிடந்த தமிழ்நாடு இன்று எழுச்சி பெற்றிருக்கிறது. முடங்கிக் கிடந்த தமிழ்நாடு இன்று புத்தெழுச்சி பெற்றிருக்கிறது. 

 

நிதி நெருக்கடியில் இருந்து தமிழ்நாடு மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஓராண்டு காலம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையை எனக்கு கொடுத்திருக்கிறது. தலைச்சிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் சிறந்த மாநிலமாக மட்டுமல்ல; அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக விரைவில் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. 

 

மாலையிலே ஆத்தூருக்கு வருவதற்கு முன்பு மேட்டூருக்குச் சென்று அணையைத் திறந்து விட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். வழக்கமாக ஜூன் 12- ஆம் தேதிதான் அணை திறக்கப்படும். கடந்த ஆண்டு ஜூன் 12- ஆம் தேதி, நானே வந்து அணையை திறந்து வைத்தேன். அணை திறப்பின் மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 

 

மேட்டூர் அணை, சேலம் மாவட்டத்தில் இருந்தாலும் சுற்றியுள்ள 12 மாவட்ட மக்களுக்கும், நிலப்பரப்புக்கும் ஒளி விளக்காக மேட்டூர்தான் அமைந்திருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மிகச்சரியாக ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் திறக்கப்பட்டதா? என்றால் இல்லை. 2020- ஆம் ஆண்டில் மட்டும்தான் ஜூன் 12- ல் அணையைத் திறந்தார்கள். அதற்கு முந்தைய ஆண்டுகளில், செப். 17, ஆக. 2, ஆக. 10, செப். 20, அக். 2, ஜூலை 19, ஆக. 13 என 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், உழவர்களைப் பற்றி எந்த கவலையுமின்றி தங்கள் விருப்பப்படிதான் தண்ணீரைத் திறந்து விட்டுள்ளனர். 

They incite sectarianism and do politics! BJP Chief Minister MK Stalin's indirect attack on!

ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்த கடந்த ஆண்டே கூட சரியாக ஜூன் 12- ல் அணையைத் திறந்தோம். இந்த ஆண்டும் ஜூன் 12- ஆம் தேதிதான் அணையை திறக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இயற்கையே இந்த ஆட்சிக்கு மாபெரும் ஆதரவைக் கொடுக்கும் அடையாளமாகத்தான் மழை கொட்டுகிறது. 

 

தண்ணீர் வரத்து அதிகரித்த காரணத்தால் முன்கூட்டியே இன்றே மேட்டூரில் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறோம். நாடு விடுதலை அடைந்ததில் இருந்தே குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்கப்படும் நாளுக்கு முன்னால், மே மாதத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது இதுதான் முதல்முறை. தேர்தல் வாக்குறுதியில் நாம் கொடுக்காத வாக்குறுதி இது. ஆக, மக்கள் மட்டுமின்றி இயற்கையும் நம் பக்கம் இருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம். 

 

ஆட்சிக்கு வந்தபிறகு நாம் செய்யத் தொடங்கிய முதல் பணி, பாசன கால்வாய்களை தூர் வாரியதுதான். கால்வாய்களை விரைவாக தூர் வாரியதால் கடைமடை வரை தண்ணீர் பாய்ந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே தூர்வாரும் பணிகள் தொடங்கிவிட்டது. 80 கோடி ரூபாயில் இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் பாயப் போகிறது.

 

கடந்த ஆண்டு உழவர்களுக்கு 61 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கப்பட்டது. இதனால் வரலாற்றில் முதன்முதலாக நெல் சாகுபடி பரப்பு அதிகமானது. 4.90 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதனால் 1.15 கோடி டன் உணவு உற்பத்தி நடந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச உணவு உற்பத்தி. 

 

தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததன் அடையாளமாகத்தான் மண் செழிப்பு, விளைச்சல் அதிகமாகி இருக்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணவீக்கம் அதிகரித்து இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் பணவீக்கம் குறைந்து இருக்கிறது. இதை தமிழ்நாடு அரசு சொல்லவில்லை. ஒன்றிய அரசின் நிறுவனம்தான் இந்த புள்ளி விவரங்களை சொல்லி இருக்கிறது. 

 

பணவீக்கம் குறைய நம்முடைய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள்தான் காரணம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பெண்களுடைய வாழ்வில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்த திட்டம் உருவாக்கி  இருக்கிறது. மாத சம்பளம், தினக்கூலி வாங்கக் கூடிய பெண்களுக்கு 600 முதல் 2500 ரூபாய் வரை மாதம்தோறும் செலவு மிச்சமாகிறது.

 

மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்களை செயல்படுத்தி  வருகிறோம். ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை  லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் ஓராண்டுக்கு முன்பே குறைத்தோம். கரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4,000 ரூபாய் கொடுத்தோம். மளிகை பொருள்களை வழங்கினோம். நெருக்கடியான நேரத்திலே கோடிக்கணக்கான மக்களுக்கு அது ஆறுதலை அளித்தது. 

 

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கினோம். 5 பவுனுக்குக் கீழ் நகைக்கடன் பெற்ற 13 லட்சம் பேருக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்தோம். மகளிர் சுய உதவிக்குழுவிற்கு 2,000 கோடி ரூபாய் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தினோம். தேர்தலுக்கு முன்னால் மக்களை சந்தித்தபோது, லட்சக்கணக்கில் மக்கள் மனு கொடுத்தனர். அதை ஒரு பெட்டியில் போட்டு பூட்டி வைத்தேன். ஆட்சிக்கு வந்த பிறகு திறந்தேன். அதில் இருந்த 2.50 லட்சம் மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு கண்டவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். 

 

அதையடுத்து, 100 நாள்களில் உங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செய்து தரக்கூடிய காரியங்களை செய்வேன் என்று சொன்னேன். சொன்னதைப் போலவே செய்தேன். இப்போது அதே போல உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதியில் விரிவுபடுத்தினோம். தேர்தல் முடிந்த பிறகு, எனக்கு 234 தொகுதிகளும் சொந்த தொகுதிகளைப் போல எண்ணிதான் செயல்பட்டு வருகிறேன். அதனால்தான், இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கூட பாராட்டக்கூடிய வகையில் தி.மு.க. ஆட்சி பீடு நடை போட்டு வருகிறது. 

 

மிகுந்த நல்லெண்ணத்தோடு ஒரு நல்லாட்சியை மக்களாகிய நீங்கள் உருவாக்கினீர்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. இவ்வளவு நன்மைகள் நடக்க நீங்கள்தான் காரணம். அதை நிறைவேற்றக்கூடிய கருவிதான் நான். தி.மு.க. வளர்ந்து விட்டது என்பது இந்தியாவுக்கே தெரிந்து விட்டது. இங்கிருந்து போன தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வளர்ந்து விட்டது என்று உலகத்திற்கே தெரிந்து விட்டது. அதனால்தான் வெளிநாட்டு நிறுவனங்களும் தொழில் தொடங்க இங்கு வருகின்றனர். 

 

இப்படி உலகம் உணர்ந்ததை, தமிழ்நாட்டில் உள்ள சிலரால் உணர முடியவில்லை. அவர்களுக்காக நான் வேதனைப்படுகிறேன். பரிதாபப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். இந்த ஆட்சி மீது நியாயமான குறை சொல்ல முடியாத சிலர், ஆன்மீகத்தின் பெயரால் குறை சொல்ல தொடங்கி இருக்கிறார்கள். எவரது பக்திக்கும், எவரது உணர்வுக்கும் திமுக அரசு தடையாக இருந்ததும் இல்லை. இனியும் இருக்காது. பக்தி பிரச்சாரம் ஒரு பக்கம் நடக்கட்டும். அதேபோல பகுத்தறிவு பிரச்சாரம் ஒருபக்கம் தொடரட்டும் என்பதுதான் கலைஞர் நமக்கு காட்டியிருக்கும் பாதை. 

They incite sectarianism and do politics! BJP Chief Minister MK Stalin's indirect attack on!

ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. எல்லா துறையும் வளர வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறேன். 2,500 கோடி ரூபாய் திருக்கோயில் சொத்துகள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களின் ஆவணங்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். கோயில்களில் பணியாற்றும் அனைவருக்கும் 4,000 ரூபாய் பணம், அரிசி கொடுத்திருக்கிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் இந்த ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.  அன்னை தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டுள்ளோம். 

 

ஒரு கால பூசை திட்டத்தின் கீழ் 30,000 அர்ச்சகர்களுக்கு மாதம் 1,000 ரூபாய், தலைமுடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கி இருக்கிறோம்.  ஒருகால பூசை செய்யக்கூடிய கோயில்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி, 12959 கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டு உள்ளது. 

 

அறநிலையத்துறை சார்பில் 10 கலைக்கல்லூரிகள் உருவாக்கப்படும். கோயில் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் செய்து கொள்ளும் திட்டம் கொண்டு வந்துள்ளோம். திருக்கோயில் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. பொங்கல் கருணைத்தொகை தரப்பட்டுள்ளது. ஆலய அலுவலக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 81 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு உள்ளது. எனது தலைமையில் ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த ஓராண்டில் செய்த சாதனைகள். 

 

உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால் இதையெல்லாம் நீங்கள் ஆதரித்திருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக மதத்தை வைத்து, மதவெறியைத் தூண்டி அரசியல் செய்யும் நிலையில் இருப்பவர்கள், இதை திசை திருப்புகின்றனர். 

 

பொய்யான அவதூறுகளை சொல்லி ஆட்சி மீது அவதூறுகளை பரப்புகின்றனர். இந்த அவதூறுகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்னபடி, நான் என் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். யாருக்கும் பதில் சொல்லி பதில் என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை." இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.