Skip to main content

தமிழக கல்வி நிறுவனங்களை அவமானப்படுத்திய மோடி அரசு!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
anna & iit


சென்னை ஐஐடிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் சிறப்பு அந்தஸ்த்து வழங்க மறுத்த பாஜக அரசு, இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு மாண்புமிக்க பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்த்தை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

மூன்று அரசு பல்கலைக்கழகங்களுக்கும், மூன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் சமவாய்ப்பு கொடுப்பதற்காக சென்னை ஐஐடிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் சிறப்பு அந்தஸ்த்து மறுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

அரசு கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சமவாய்ப்பு கொடுப்பதே தவறு. இந்த லட்சணத்தில், இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து கொடுத்திருப்பது அசிங்கத்திலும் அசிங்கம் என்று கல்வியாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

மாண்புமிக்க பல்கலைக்கழகங்கள் என்ற பட்டியலுக்காக பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நியமிக்கப்பட்ட குழு எட்டு பல்கலைக்கழகங்களை தேர்வு செய்தது. அந்தப் பட்டியலில் சென்னை ஐஐடியும், அண்ணா பல்கலைக் கழகமும் இடம்பெற்றிருந்தது. அந்த எட்டு பல்கலைக்கழகங்களின் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. ஆனால், ஆறு பல்கலைக்கழகங்களை மட்டுமே மாண்புமிக்க பல்கலைக்கழகங்கள் என்று அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அவற்றில் மூன்று அரசு கல்வி நிறுவனங்களுக்கும் மூன்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படியே அரசு கல்வி நிறுவனங்களில் ஐஐடி டெல்லி, ஐஐடி பம்பாய், ஐஐஎஸ்சி பெங்களூரு ஆகிய கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 

 

எல்லாம் சரிதான் என்றாலும், தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு கல்வி நிறுவனங்களும் மாண்புமிக்க என்ற அந்தஸ்த்துக்கு எல்லா வகையிலும் தகுதி வாய்ந்தவைதான். ஆனால், தனியார் நிறுவனங்களுடன் அரசு நிறுவனங்களை ஒப்பிட்டு எப்படி வாய்ப்பை நிராகரிக்கலாம். அதிகப்படியான் ஆய்வுகளை நடத்தி வெளியிட்ட நிறுவனங்கள் என்ற அடிப்படையில்தான் உலகளாவிய இத்தகைய அந்தஸ்த்து தரப்படுவது வழக்கம். அப்படிப் பார்த்தாலும் சென்னை ஐஐடி மற்ற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் எல்லா வகையிலும் மேன்மைமிக்கது என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன்.

இவராவது இப்படி கருத்துத் தெரிவித்திருக்கிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில்சொல்லவே ஆள் கிடைக்கவில்லை என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை.

இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கிற அந்தஸ்த்து தமிழகத்துக்கு கிடைக்கலையேன்ற அசிங்கம் கொஞ்சம்கூட இருக்காதா என்று கல்வியாளர்கள் வினா எழுப்புகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.