Skip to main content

தூர்வாரியதாக கோடிக்கணக்கில் பணமும் அபேஸ்! இப்போ தண்ணீர் கொடுக்கவும் தண்ணீ காட்டுறாங்க! 

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

 

Sand robbery


 

காவிரியில் எதிர்பாராத விதமாக மழை, புயல் காரணமாக காவிரியில் அதிக அளவு தண்ணீர் விடப்பட்டு காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அது மக்களுக்கு பயன்படும் வகையில் காவிரியின் கிளை ஆறுகளில் தண்ணீர் திறந்து விடுவார்கள் என விவசாயிகள் பெரிதும் நம்பி இருந்தார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை தண்ணீர் திறந்து விடாமல் பெருமளவு கொள்ளிடத்தில் திறந்து விட்டதால் ஏற்கவே மணல் கொள்ளையினால் பாதிக்கப்பட்ட கொள்ளிடத்தின் முக்கிய பாலம் மதகுகள் உடைந்து விழுந்தது. இதன் பிறகாவது தண்ணீர் விடுவார்கள் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. 

 

இந்த நிலையில் கிளை ஆறுகள், ஏரிகளுக்கு தண்ணீர் இன்னும் வராத நிலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டங்கள் அறிவிப்பு வெளியிட ஆரம்பித்தனர். இந்த நிலையிலும் திருச்சியில் அரியாற்று பகுதியில் உள்ள தமிழ்நாடு விவசாய சங்கம் சின்னதுரை மற்றும் சமூகநீதி பேரவை வழக்கறிஞர் ரவி தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3.10.2018 காலை 6 மணி முதல், அல்லித்துறை , புங்கனூர் இணைப்பு பாலம் கீழ் அரியாற்றில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். காவிரி கிளையாற்றில் தண்ணீர் விட சொல்லி போராட்டம் பண்ண ஆரம்பித்தனர். ஆனால் கடந்த 3 மணி நேரமாக நடைபெறும் போராட்டத்திற்கு பேச்சு வார்த்தைக்கு கூட அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. .
 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் சமூகநீதி பேரவை வழக்கறிஞர் ரவி நம்மிடம், திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு பாசன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் 17 ஏரிகள், புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் மூலம் பாசனம் பெறும் 36 ஏரிகள், அரியாறு வடிநில கோட்டத்தின் கீழ், மழைநீர் வரத்து பெறும் 7 ஏரிகள் என மொத்தம் 60 ஏரிகளில் ரூ.29.78 கோடி மதிப்பில் குடிமரமாத்து பணிகள் நடைபெற்றதாக அறிவித்தார்கள். 


இத்தோடு மேலும், 2018-19ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு நிதியின் மூலம் ஆறுப்பாதுகாப்பு கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பாசன வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள், வடிகால்களை புனரமைக்க ரூ.3.10 கோடியும், அரியாறு வடிநில கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஆதாரங்களில் 8 பணிகளை மேற்கொள்ள ரூ.76 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் பெற்றது என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் டி.பி.கணேஷன் சொல்லியிருந்தார்.
 

இவ்வளவு பணம் தூர்வாரி செலவு செய்தாக கணக்கு காண்பித்து விட்டு தற்போது தண்ணீர் விடாமல் இருப்பது எவ்வளவு துரோகம். மக்கள் பணத்தை இப்படி கொள்ளையடிக்கிறார்கள். அரியாற்றுக்கு தண்ணீர் விடவில்லை, புங்கனூர் ஏரிக்கு தண்ணீர் கேட்டோம் இதற்கு விடவில்லை. இப்படி விவசாயிகளை உயிரோடு சாவடிக்க நினைக்கிறார்கள் என்றார். தூர்வாரியதாக பணத்தையும் அபேஸ் பண்ணிட்டாங்க, இப்போ தண்ணீர் கொடுக்காம தண்ணீர் காட்டுறாங்க என கொதிப்போடு. பேசினார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.