Skip to main content

சென்னைக்கு விடைகொடுத்த மாரிமுத்து; வருகைக்காக காத்திருக்கும் பசுமலைத்தேரி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Marimuthu said goodbye to Chennai; Pashumalai Teri to Kadum for visit

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை, சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் இருந்து தேனியில் உள்ள சொந்த ஊரான பசுமலைத்தேரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆம்புலன்ஸில் உடல் ஏற்றப்பட்டுள்ளது. மறுபுறம் தேனியில் உள்ள அவருடைய பழைய பூர்வீக வீட்டில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாளை காலை 11:30 வரை அங்கிருக்கக் கூடிய பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் உடல் வைக்கப்படுகிறது. அதன் பிறகு 12 மணிக்கு மேல் அவருடைய இறுதிச் சடங்கு நடைபெறும் என அவருடைய உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்