Skip to main content

மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு!- நிதி ஒதுக்கீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகள் மேற்கொள்வதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்கக் கோரி நீதிபதி கிருபாகரன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

mamallapuram maintenance tamilnadu government chennai high court

 

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் நேற்று (02.01.2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களைப் புணரமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் அந்தப் பகுதியில் வியாபாரிகள் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும், துப்புரவுப் பணிக்காகத் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், அதிக எண்ணிக்கை கொண்ட 7  கழிவறைகள் மற்றும் 30 மறு சுழற்சி குப்பைகளைப் போடும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

mamallapuram maintenance tamilnadu government chennai high court


திறந்த வெளி கழிவுநீர் வெளியேற்ற திட்டத்தை மாற்றம் செய்து 8 கிலோ மீட்டர் துரத்திற்கு பாதாள சாக்கடைத் திட்டம் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய செயலாளர் ராமநாதன் தாக்கல் செய்த பதில் மனுவில், நாள்தோறும் இரண்டாயிரம் பேர், வார இறுதியில் பத்தாயிரம் பேர்  மாமல்லபுரத்திற்கு வருவதாகவும் விடுமுறை தினங்களில் 50 ஆயிரம் பேர் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 290 நிரந்தர ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டுள்ளனர். மீண்டும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க காவல்துறை உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பார்க்கிங் வசதி இல்லாததால், மாமல்லபுரத்திற்கு வெளியே பார்க்கிங் வசதி செய்ய தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mamallapuram maintenance tamilnadu government chennai high court


டிஜிபி தாக்கல் செய்த பதில் மனுவில் மாமல்லபுரத்திற்கு வரும் அயல்நாட்டினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தனி காவல் பிரிவு உருவாக்கப்பட்டு, ஆங்கிலப் புலமை பெற்ற போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  அங்கீகரிக்கப்பட்ட எத்தனை தனியார் தொண்டு நிறுவனங்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்? தன்னார்வலர்கள் எத்தனை பேர் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்? மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதிகளி்ல் பாரமரிப்பு பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறித்த விவரங்களை, மத்திய மாநில அரசுகள் ஜனவரி 22- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.