டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தங்கியிருந்த 8 இந்தோனேசியர்கள் மீது விசா விதிமீறல்,பேரிடர் சட்ட விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏற்கனவே டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் தென்காசி மாவட்டத்தில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது அதைத் தொடர்ந்து சென்னை வந்த 10 பேரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் புறப்படத் தயாராக இருந்த சிறப்பு விமானத்தில் பயணிக்க வந்த போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேலும் இவர்கள் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.