Skip to main content

எழுத்தாளுமைகள் சங்கமித்துள்ள இலக்கிய திருவிழா....!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் என்கிற அந்த சிறிய நகரத்தில் தமிழக இலக்கிய ஆளுமைகள் சங்கமித்துள்ள பண்பாட்டு திருவிழா தொடங்கியிருக்கிறது. ஆம், தமிழர்களின் அரசியல், ஆய்வு, மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, தத்துவம், வாழ்வியல் கூறுகள் அணைத்திற்கும் கருத்தாளுமிக்க, தமிழோடு ஒன்றர கலந்த ஒரு வழிகாட்டி அமைப்புதான் "தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" பொதுவுடமை இயக்க தலைவர்களில் ஒருவராகவும் அறிஞர் பெருமக்களால் இன்றளவும் "இலக்கிய பேராசான்" என அழைக்கப்படும் ப.ஜீவானந்தம் அவர்களால் 1961ம் வருடம் தொடங்கப்பட்டது தான் இந்த பெருமன்றம். 

 

ஜெயகாந்தன், நா.வானமாமலை, தனுஷ்கோடி ராமசாமி, கவிஞர் ஹெச், ஜி.ரசூல் என  இந்த குடிலில் வளர்ந்த ஆளுமைகள் வரிசை ஏராளம். அப்படி ஜீவாவனந்தத்தால் தொடங்கப்பட்ட இந்த அறிவுசார் பெருமன்றத்தின் 60ஆம் ஆண்டு மற்றும் 12வது மாநில மாநாடுதான் 20ந் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. 20, 21, 22 என மூன்று நாட்கள் இம் மாநாடு நடைபெற உள்ளது. 20ந் தேதி காலை பறை இசையுடன் தொடங்கப்பட்ட இம்மாநாடு, தொடக்க நிகழ்வில் சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன், துணை செயலாளர்கள் திருப்பூர் சுப்பராயன் எம்.பி, மு.வீரபாண்டியன், தி.மு.க. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ.ஆர். ராமச்சந்திரன், காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், த.மு.எ.ச. பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சன்யா, பெருமன்ற பொதுச் செயலாளர் பேராசிரியர் இரா.காமராசு உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


தொடர்ந்து மூன்று நாட்களும் கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம், திறனாய்வு, இந்திய அரசியல், உலக அரசியல் மற்றும் பண்பாட்டு தாக்கங்கள், சுற்றுச்சூழல், அறிவியல், விஞ்ஞானம், மார்க்சியத்தின் அடுத்த கட்டம், பண்பாட்டு தளம் செய்ய வேண்டியது என ஏராளமான தலைப்புகளில் அந்தந்த துறை சார்ந்த தமிழ் நாட்டின் அறிவு சார்ந்த ஆளுமைகள், படைப்பாளிகள் கலந்து கொண்டு திறனாய்வு மற்றும் ஆய்வு உரைகளை, கட்டுரைகளை வாசிக்க உள்ளனர். அதே துறைகளில் வல்லுனர்களாக உள்ளவர்கள் மதிப்பீடு உரைகளும் நிகழ்த்த உள்ளனர். 


இதற்கிடையே வெள்ளி, சனி இரு நாட்களும் இரவு முழுக்க கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பெருமன்றத்தின் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவரும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீர தோற்றத்தின் மறு உருவமாக இருந்தவரும், மானுட மதிப்பை தன் இலக்கியத்தால் செதுக்கிய மறைந்த எழுத்தாளர், நாவலாசிரியர், தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் வாழ்ந்து மறைந்த அதே சாத்தூரில் அவர் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பெருமை மிகு மாநாடு சிறப்புடன் நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.