Skip to main content

சூளகிரி விவசாயியை கொன்றது ஏன்? கொலையாளிகள் வாக்குமூலம்!

Published on 15/05/2020 | Edited on 16/05/2020

 

  Krishnagiri Farmer issue

 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கொம்மேபள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (34). விவசாயியான இவர் சொந்தமாக டெம்போ வாகனம் வைத்து ஓட்டி வந்தார். மேலும், சொந்த ஊரில் ஒரு குவாரியில் கல் உடைக்கும் தொழிலும் செய்து வந்தார்.


கடந்த 13ம் தேதி, இரவு 8.30 மணியளவில் வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இச்சம்பவம், சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தனப்பள்ளி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

 


சடலத்தை உடற்கூறாய்வு செய்ய ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்த பிறகு சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை பெற்று சென்ற உறவினர்கள் அனுமந்தபுரம் & கெலமங்கலம் சாலையில் கிடத்தி, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்ததை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

காவல்துறை விசாரணையில், அனுமந்தபுரத்தை சேர்ந்த போடியப்பா (20), ஹரீஷ் (25), சீனிவாசன் (22), முனிராஜ் (26), மாதேஸ்வரன் (29) ஆகியோருக்கும் கொலையுண்ட முனிராஜிக்கும் குவாரியில் கல் உடைப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. 
 

nakkheeran app



அதை மனதில் வைத்துக்கொண்டுதான் மேற்கண்ட நபர்கள் முனிராஜை தீர்க்கட்டி இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் வெள்ளியன்று (மே 15) கைது செய்தனர்.

கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ''கடந்த சில நாட்களுக்கு முன்பு முனிராஜிக்கும் எங்களுக்கும் தொழில் நிமித்தமாக தகராறு ஏற்பட்டது. இதனால் நாங்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தோம். அவரை தீர்த்துக்கட்டினால்தான் கல் குவாரியில் நாங்கள் இடையூறின்றி தொழில் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தோம். அதனால்தான் முனிராஜை திட்டமிட்டு கொலை செய்தோம்,'' என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.