Skip to main content

சூளகிரி அருகே விவசாயி வெட்டி படுகொலை! மர்ம கும்பல் தப்பி ஓட்டம்!!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
krishnagiri district shoolagiri


சூளகிரி அருகே, விவசாயியை அவருடைய வீட்டு வாசலிலேயே மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கொம்மேபள்ளி அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (34). விவசாயி மற்றும் சொந்தமாக டெம்போ வாகனம் வைத்து ஓட்டி வந்தார். இவருடைய மனைவி பாக்கியம். சந்தோஷ் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் உள்ளனர். 

புதன்கிழமை (மே 13) இரவு முனிராஜ் தனது மகனுடன் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். மகன் மட்டும் வீட்டுக்குள் சென்றுவிட, முனிராஜ் வாசலில் நின்று கொண்டிருந்தார்.


அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர், முனிராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவருடைய தலை, முகம், கை ஆகிய பகுதிகளில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. தாக்குதல் நடத்திவிட்டு மர்ம கும்பல் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றது. 

முனிராஜின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கே அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 


உள்ளூரில் முனிராஜ், ஒரு குவாரியில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். அதே குவாரியில் இன்னொரு தரப்பினரும் கற்களை வெட்டி எடுத்து வந்தனர். இதில் இருதரப்புக்கும் சில மாதத்திற்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதல் பின்னணியில் முனிராஜை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறது. இது தொடர்பாக அனுமந்தபுரத்தை சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.