Skip to main content

கேரளாவில் இருந்து சேலத்துக்கு லாரியில் தப்பிச் செல்ல முயன்ற 67 பேரை சுற்றி வளைத்த போலீசார்

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒரு மாவட்டத்தைத் தாண்டி இன்னொரு மாவட்டத்துக்குள் மக்களோ வாகனங்களோ நுழைய முடியாமல் கட்டுப்பாடு விதித்துள்ளது அரசு. இதில் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் கொண்டு செல்லும் வாகனங்களைச் சோதனைக்குப் பிறகே எல்லையைத் தாண்டி விடுகின்றனா்.

 

kerala to Salem



இந்த நிலையில் கேரளாவில் கண்ணூா் மாவட்டத்தில் கா்நாடகம், தமிழ்நாடு மாநிலங்கள் மற்றும் மலப்புரம் மாவட்டத்திற்குச் செல்லும் எல்லைகளை அந்த மாவட்ட நிர்வாகம் மார்ச் 24-ம் தேதி அடைத்தது. மேலும் ஊரடங்கு அறிவித்துள்ளதால் மாவட்ட எஸ்.பி. தலைமையில் போலீசார் மாவட்டம் முமுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா்.

 

kerala to Salem



25-ம் தேதி மாலை பாயோழி இன்ஸ்பெக்டா் பிஜீ பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் காய்கறிகளை இறங்கி விட்டு தலச்சோரியில் இருந்து சேலத்துக்குச் சென்று கொண்டிருந்தது. அதை இன்ஸ்பெக்டா் பிஜீ சோதனை செய்த போது அந்த லாரியில் 67 போ் ஆண்களும் பெண்களும் இருந்தனா். அவா்களிடம் விசாரத்தபோது அத்தனை பேரும் சேலத்தைச் சோ்ந்தவா்கள் என்றும் கண்ணூரில் கூலி வேலை செய்து வருபவா்கள் என்றும் தற்போது கரோனா வைரஸ் பரவியிருப்பதால் சொந்த ஊருக்கு லாரியில் தப்பிச் செல்ல இருந்ததாகக் கூறியுள்ளனர்.
 

இதையடுத்து அவா்கள் 67 பேரையும் ஆா்டிஓ மற்றும் சுகாதாரத்துறையினா் இரண்டு கேரளா அரசு பேருந்துகளில் ஏற்றி தலடச்சோரியில் தனிமைப்படு்த்தி பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனா். மேலும் ஊரடங்கு உள்ள 21 நாட்களும் அவா்களுக்கு அனைத்து தேவைகளையும் வசதிகளையம் செய்து கொடுப்பதாகக் கண்ணூா் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.