Skip to main content

கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது...

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
Kallakurichi

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். அவரது மருத்துவமனையில் இரண்டு பெண்களுக்கு கருப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பெண்கள் அவரது மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய காத்திருப்பதாகவும், அவர் போலி மருத்துவர் எனவும் மேலூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் பங்கஜம் என்பவருக்கு தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து முருகேசன் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த இரண்டு பெண்கள் மற்றும் அதற்காக காத்திருந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து போலி மருத்துவர் முருகேசனிடம் நடத்திய விசாரணையில், அவர் டி.பார்மசி மட்டுமே படித்துவிட்டு மருத்துவமனை உருவாக்கி பலருக்கும் சட்டவிரோதமான முறையில் ரகசியமாக கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்துள்ளது.

 

இவருக்கு கச்சராபாளையம் கள்ளக்குறிச்சி விருகாவூர், அசகளத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் சிலர் புரோக்கர்களாக இருந்தது கொண்டு அங்கிருந்து கருகலைப்பு செய்ய விரும்பும் பெண்களை கண்டறிந்து அவர்களை இவரது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் முருகேசனை கைது செய்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சியில் செயல்பட்டுவரும் இவருடைய கருக்கலைப்பு மையத்தையும் கண்டறிந்து அதற்கு சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இவருக்கு ஆள் பிடித்து அனுப்பும் புரோக்கர்களையும் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

தங்கள் காதலர்களுடன் தனிமையில் இருக்கும்போது, முறைதவறிய நெருக்கம் ஏற்படுவதால் அதன்மூலம் கற்பமாகும் இளம் பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் முறைதவறிய காதலில் ஈடுபடும் பெண்கள் கற்பமடைகின்றனர். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால், கர்ப்பம் அடைந்தது வெளியே தெரிந்துவிடும் என்பதால் இது போன்ற போலி மருத்துவர்களிடம் யாருக்கும் தெரியாமல் சென்று கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகரிக்கின்றனர். இதுகுறித்து அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.