Skip to main content

கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடம் - காவேரி மருத்துவமனை அறிக்கை

Published on 07/08/2018 | Edited on 07/08/2018

 

திமுக தலைவர் கலைஞர் கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் இன்று மாலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது என்று காவேரி மருத்துவமனையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும்,  உடல் உறுப்புகளின் செயல்பாடு மோசமான நிலையை அடைந்துள்ளது.  கடந்த சில மணி நேரங்களாக கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
 

 

 

 

kau

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

'Rajinikanth will return home in a few days' - Hospital report!

 

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று (28/10/2021) சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இருப்பினும், அவரது உடல்நலம் குறித்து அதிகாரபூர்வ தகவலுக்கு அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். 

 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று (29/10/2021) மதியம் 02.30 மணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வருகிறார். ரத்த ஓட்டத்தைச் சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இன்னும் சில நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என தெரிவித்துள்ளது.

 

 

Next Story

கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

coronavirus vaccine second does dmk mkstalin at kauvery hospital

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ஆகியோருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவுடன் ஆலோசனை நடத்தினார்.  

 

தமிழக தேர்தல் நிறைவடைந்ததை அடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சொந்த ஊர் (அல்லது) சுற்றுலா சென்றுள்ளனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். இந்த நிலையில் சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை விமானம் நிலையம் வந்த மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பை அளித்திருந்தனர். 

 

அதன் தொடர்ச்சியாக, தனிவிமானம் மூலம் நேற்று (21/04/2021) இரவு சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின், சென்னை காவேரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் போட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை இன்று எடுத்துக்கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும்! நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை மு.க.ஸ்டாலின், கடந்த மார்ச் 9ஆம் தேதி எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.