Skip to main content

கோவிலுக்கு சென்ற நேரத்தில் வீட்டில் கொள்ளை! -போலீசார் விசாரணை!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

 Home robbery on the way to the temple! -Police investigation!

                                                                            கோப்புக்காட்சி 

திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற மீனாட்சி, விருதுநகரிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியபோது, அதிர்ச்சி காத்திருந்தது. 

 

அப்படியென்ன நடந்தது?

 

விருதுநகர் மாடர்ன் நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவருடைய கணவர் மனோகரன், கனடாவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். மீனாட்சி தனது வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர்கள் லதா மற்றும் சரஸ்வதி ஆகியோரோடு, 10-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கெல்லாம் திருச்செந்தூர் சென்றார். அங்கு முருகனைத் தரிசித்துவிட்டு, அன்றிரவே விருதுநகர் திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்கப் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியானார்.  உடனே, விருதுநகர் – சூலக்கரை காவல்நிலையத்தில் அவர் புகாரளிக்க, சம்பவ இடத்துக்கு வந்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

 

காவல்துறையின் விசாரணையில், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகை மற்றும் ரூ.44000 ரொக்கம் கொள்ளை போனது தெரிந்தது. வழக்கு பதிவு செய்த சூலக்கரை காவல் நிலைய போலீசார், கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.