Skip to main content

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை... 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

Heavy rain in next three hours ... Warning for 3 districts!


 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்து 3 மணிநேரத்திற்கு மிகக் கனமழை பொழியக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழைபொழிந்து வருகிறது. அதிகபட்சமாக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருவள்ளூரில் 8.5 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியிருந்தது. அதேபோல் காஞ்சிபுரத்தில் 6.2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியிருந்தது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிற்கு எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதேபோல் சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்