Skip to main content

பணத்தைத் தவறவிட்ட விவசாயி... நேரில் வந்து ஒப்படைத்த தம்பதி!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

Farmer who lost money ... couple who came and handed over

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது வடசெட்டியேந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி(40). இவர் விவசாயப் பணி செலவினங்களுக்காக ஏற்கனவே தனது  குடும்பத்தினர் நகைகளைக் கொண்டு சென்று சங்கராபுரம் நகரில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்துள்ளார். அந்த நகைகளை மீட்பதற்காக 40 ஆயிரம் பணத்தை வீட்டில் இருந்து கைப்பையில் வைத்து எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சங்கராபுரம் வங்கிக்குச் சென்றார்.

 

அங்கு சென்று பார்த்த போது தான்  வைத்திருந்த பணப் பையைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த முனுசாமி சந்திராபுரம் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தொழுவம் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த  வெங்கட்ராமன்-காயத்ரி தம்பதியர் சாலையில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்துள்ளனர். அதில் பணம் இருப்பது தெரியவந்ததையடுத்து தம்பதியர் இருவரும் சங்கராபுரம் காவல் நிலையம் சென்று தாங்கள் கண்டெடுத்த பணப்பையை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

இதைக் கண்டு வியப்படைந்த போலீசார் பணத்தை தவற விட்ட விவசாயி முனுசாமிக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் முன்னிலையில் விவசாயி முனுசாமி தவற விட்ட பணத்தைக் கண்டெடுத்த அந்த இளம் தம்பதியர் கைகளாலேயே முனுசாமியிடம் ஒப்படைத்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.